Sasikumar: ஊர் என்றால் கோயிலை போல் பள்ளியும் இருக்க வேண்டும்.. கைவிட்டு விடாதீர்கள் - சசிகுமார் மாஸ் பேச்சு
Sasikumar Speech: ஊர் என்றால் கோயில் இருப்பதை போல் பள்ளியும் இருக்க வேண்டும். பள்ளியை கைவிட்டுவிடக்கூடாது என்று தேனியின் நடைபெற்ற அரசு பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைகளின் ஹீரோவாக கலக்கி வரும் இவர் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் கொண்டவராக உள்ளார்.
இதையடுத்து தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் செயல்படும் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களை பாராட்டி விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிக்குமார் ஆசிரியர் மற்றும் நன்கொடையாளர்களை பாராட்டி பேசினார்.
ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்
நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, "அரசு பள்ளியை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி தெரிந்து கொண்டேன். இதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றிகள். அரசு பள்ளியை மேம்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.
அரசுப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அங்கு பாணியாற்றும் பணியாளர்கள் என அனைவரும் திறமையானவர்களை உருவாக்க, தங்களது உழைப்பை தருகின்றனர். இது உங்கள் ஊர், உங்கள் பள்ளி. எனவே அதனை கைவிட்டுவிடக்கூடாது. அரசுப் பள்ளிக்கு உதவி செய்த அனைவருக்கும் விருது வழங்குவது நான் அவர்களுக்கு செய்யும் நன்றி.
ஊருக்கு கோயிலை போல் பள்ளியும் அவசியம்
அரசுப் பள்ளியை நடத்துவதற்கு அரசை மட்டும் நம்பாமல் பொதுமக்களும் நிதி வழங்கி உதவ வேண்டும். ஒரு ஊருக்கு கோயில் எவ்வளவு அவசியமோ, அதுபோல பள்ளியும் மிக மிக அவசியம். அரசு பள்ளிக்கு குறைவான மாணவர்களே படிக்க வரும் இந்த காலகட்டத்தில் அதை மேம்படுத்த தங்களது உழைப்பை தரும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்" என்றார்.
முன்னதாக, அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரும் நடிகர் சசிக்குமார் விருதுகளை வழங்கி கெளரவித்தார். சசிகுமார் காண வந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து தற்போது டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இயக்குநராக சசிக்குமார் மீண்டும் கம்பேக் கொடுக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இலங்கை தமிழ் பேசும் சசிக்குமார்
டூரிஸ்ட் பேமிலி படம் நகைச்சுவை படமாக உருவாகி வரும் நிலையில், இதன் டீஸர் 3 நிமிடங்களுடன் கூடிய காட்சிகள் இடம்பிடித்துள்ளன. கணவன் மனைவியாக வரும் சசிக்குமார் - சிம்ரன் தங்களது இரு மகன்களுடன் இரவு நேரத்தில் வீட்டை காலி செய்து ஊரை விட்டு எஸ்கேப் ஆக முயற்சிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது. ககலகலப்பான காமெடி காட்சிகளுடன் படத்தின் டீஸர் அமைந்துள்ளது. படத்தில் சசிக்குமார், சிம்ரன் ஆகியோர் இலங்கை தமிழில் பேசியுள்ளார்கள். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது

டாபிக்ஸ்