Actress Death: ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா மரணம்.. தென்னிந்திய மக்களை மகிழ்வித்த நடிகைக்கு ரசிகர்கள் இரங்கல்..
Actress Death: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actress Death: கோயம்புத்தூரை சேர்ந்த புஷ்பலதா, கொங்கு நாட்டு தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , கல்யாண ராமன் என பெயர் சொல்லும் படங்களில் நடித்தார்.
ஏவிஎம் ராஜனுடன் திருமணம்
பின், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், துணை வேடத்திலும் நடித்தார். இவர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, நடிகரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புஷ்பலதா, கத்தோலிக்க கிருத்துவராக இருந்த போதும் அவர், முருகன் மீது அதீத பக்தியும் பாசமும் கொண்ட ஏவிஎம் ராஜனை காதலித்தார். கரம் பிடித்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கிருத்துவ மத சேவை
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தொடர்ந்து கிருத்தவ மதத்திற்கு சேவை ஆற்றி வந்ததாகவும், முருக பக்தனாக இருந்த ஏவிஎம் ராஜனனும் பின்னாளில் கிருத்தவ மத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.