ஒவ்வொரு பிரேமிலும் நடிக்கும் நடிப்பு அரக்கன்.. வில்லன், காமெடியன் என அனைத்திலும் பிளந்துகட்டிய கலாபவன் மணி பிறந்தநாள்..
தனக்கு கிடைக்கும் சின்ன கதாப்பாத்திரம் தொடங்கி, அனைத்திலும் தன் முத்திரையை பதித்த நடிப்பு அரக்கன் கலாபவண் மணியின் பிறந்தநாள் இன்று.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான விலல்ன் மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சால்ககுடியில் பிறந்து வளர்ந்தவர் கலாபவன் மணி. இவரது இயற்பெயர் குன்னிசேரி விட்டில் ராமன் மணி. ஊரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த மணி, நடிக்க வருவதற்கு முன் மலையள நடகக் குழுவில் மிமிக்ரி கலைஞராகத் தான் பணியைத் தொடர்ந்துள்ளார்.
விஜயகாந்த் படத்தில் அறிமுகம்
மலையாள சினிமாவில் மணி அறிமுகமாகும் முன்னரே நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதன்பின் தான் அக்ஷரம் எனும் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கலாபவன் மணியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் தான் சல்லாபம். காரணம், இந்தப் படத்திற்கு பின் தான் அவர் திரைத்துறையில் காமெடியனாகவே அடி எடுத்து வைத்தார். அப்படியே மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது.