ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேஸில் இருந்து விலகிய லபாட்டா லேடீஸ்.. மற்றொரு இந்தி படத்துக்கு வாய்ப்பு!
2025 ஆம் ஆண்டு ஆஸ்கா் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் ஹிந்தி மொழியில் வெளியான லபாட்டா லேடீஸ் திரைப்படம் அனுப்பப்பட்டது.
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரபூா்வ நுழைவாக லபாட்டா லேடீஸ் திரைப்படம் தோ்வாகியது.
இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லபாட்டா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.
லபாட்டா லேடீஸ் கதை
ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடா்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படத்தின் கதை.
லபாட்டா லேடீஸ் இந்த முறை இது ஆஸ்கர் 2025 க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு ஆகும். இந்த முறை சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில், இந்த முறை விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால் தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸின் இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக மற்றொரு இந்தி படமான சந்தோஷ் வெளியானது.
எதிர்பாராத பிளாக்பஸ்டர்
லபாட்டா லேடீஸ் இந்த ஆண்டு எதிர்பாராத பிளாக்பஸ்டர். பாலிவுட்டின் மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் அமீர் கான் தயாரித்து, அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, பின்னர் நெட்ஃபிளிக்ஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கர் 2025 க்கான அதிகாரப்பூர்வ நுழைவாக அனுப்பப்பட்டது. இது தவிர, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 85 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சந்தோஷ்
ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி திரைப்படமான சந்தோஷ் இங்கிலாந்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நுழைகிறது. இந்த ஆண்டு மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. இது வட இந்தியாவின் ஒரு கிராமப்புற பகுதியிலிருந்து வந்த கதை. இப்படத்தை சந்தியா சூரி எழுதி இயக்கியுள்ளார். படத்தில் நடித்த சஹானா கோஸ்வாமி பேசும்போது, "85 படங்களில் இருந்து எங்கள் படத்தை தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் படத்தின் கதை என்ன?
சந்தியா சூரி இயக்கிய சந்தோஷ் படத்தில் நடித்தவர் சஹானா. அரசாங்க திட்டத்தால் கணவனை இழந்து அவரது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை செய்கிறார். அதில் சேர்ந்த பிறகு, அவளுக்கு உண்மையான சவால்கள் தொடங்குகின்றன. அங்குள்ள ஊழலுடன், தனது மூத்த ஆய்வாளர் சர்மாவுடன் (சுனிதா ராஜ்வார்) பணிபுரிவது அவளுக்கு ஒரு சவாலாக மாறுகிறது. இந்தப் பின்னணியில் ஒரு தலித் இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து என்ன நடந்தது என்பது தான் சந்தோஷ் படத்தின் கதை. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சந்தோஷ் ஹிந்தி படம் என்றாலும் இது இங்கிலாந்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படம். இந்த முறை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இந்தியாவிலிருந்து ஒரு படம் கூட இடம்பெறவில்லை. நார்வே, செனகல், பிரான்ஸ், லாட்வியா, பாலஸ்தீனம், டென்மார்க், தாய்லாந்து, பிரேசில், அயர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, கனடா, செக் குடியரசு மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 17-ம் தேதி நடைபெறும்.
டாபிக்ஸ்