‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
‘இன்னிக்கு தான் சொல்றாங்க, ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு எல்லாம் நைட்டில் தான் வொர்க் பண்றாங்கன்னு. ஆனால், அந்தக் காலத்திலேயே கிரேஸி மோகன் சார் நைட் நேரம் தான் உட்கார்ந்து எழுதுவார். நைட் ஒரு மணிக்கு வெத்தலையைப் போட்டுட்டு வந்தார் என்றால், விடியவிடிய எழுதுவார்’ என கே.எஸ்.ரவிக்குமார் புகழாரம் சூட்டினார்.

‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
எழுத்தாளர் கிரேஸி மோகனின் நாடகங்களின் தொகுப்பு, 25 புத்தகங்களாக சென்னையில் வெளியிடப்பட்டது. அதனை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அப்போது நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ‘’அஜித் தன்னை ’தல’ன்னு கூப்பிடாதீங்க. ஏ.கே.ன்னு கூப்பிடுங்கன்னு சொன்னால், அடுத்த படத்தில் அவரது ரசிகர்கள் ரிலீஸின்போது ’தல’ன்னு தான் கூப்பிடுறாங்க. அதை மாத்தவே முடியாது. உலக நாயகன்னு கூப்பிடாதீங்கன்னு கமல்ஹாசன் சார் சொல்றார்.