பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!

பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!

Suguna Devi P HT Tamil
Published Oct 20, 2024 01:36 PM IST

நடிகரும், பிக் பாஸ் கன்னட தொகுப்பாளருமான கிச்சா சுதீப்பின் தாயார் இன்று காலை காலமானார். சமூக வலைதளங்களில் பிரபலங்களின் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!
பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!

இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, 'அவருக்கு 86 வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இரங்கல் தெரிவித்த கர்நாடக  துணை முதல்வர் 

இதனை அறிந்த கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சுதீப் மற்றும் சரோஜாவின் படத்தை வெளியிட்டு, “நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் திருமதி சரோஜா காலமான செய்தி கேட்டு மனம் உடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார். 

அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும். இறுதிச் சடங்கில் கன்னட திரையுலகில் இருந்து பல துறை சார்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட திரை உலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரது மரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிக் பாஸ் கன்னடத்தின் படப்பிடிப்பை பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, வார இறுதி எபிசோடில் ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கும் விளம்பரமிட்டு பத்து நிமிடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது எனவும் நிகழ்ச்சியின் பாதிப்பைக் குறைக்க, சேனல் சனிக்கிழமையின் எபிசோடை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டித்ததாகத் தெரிகிறது.

சுதீப்பின் பதிவு 

2019 ஆம் ஆண்டில், அன்னையர் தினத்தை முன்னிட்டு கிச்சா சுதீப் தனது தாய்க்காக ஒரு குறிப்பை எழுதினார். அவர் அவருடன் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துகொண்டு எழுதினார், “ஒவ்வொரு தாய்க்கும் மிகவும் மகிழ்ச்சியான அன்னையர் தினம், உங்கள் நிபந்தனையற்ற லவ் என் முடிவில்லாத தியாகங்களுக்காக. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா…  எல்லாவற்றுக்கும்.!! எனப் பதிவிட்டிருந்தார்

சுதீப் 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நான் ஈ திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்திருப்பார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவன புடி' என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நித்யா மேனனுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் தமிழ் படத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் கன்னட மொழி ரீமேக்கில் இவர் ஹீரோவாக நடித்து இருப்பார். கன்னட சிங்கம் கர்நாடக முழுவதும் பெரும் வெற்றி பெற்றது குறிப்படத்தக்கது.