'உங்களுக்குள்ள அவ்ளோ அசிங்கம்.. முகத்தக் கூட வெளிய காட்டமாட்டிங்க' ரசிகனின் ட்ரோலுக்கு குஷ்பு பதிலடி
தான் ஊசி செலுத்திக் கொண்டதன் மூலம் தான் உடல் எடையை குறைத்தேன் எனக் கூறிய ரசிகருக்கு குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருபவர குஷ்பு. இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒல்லியான தேகத்தில் இருந்தாலும் சில ஆண்டுகளாகலே உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அப்போது அவரைக் கிண்டல் செய்யும் விதமாக குஷ்பு இட்லி என்றெல்லாம் கூறுவர். இப்படி பல ட்ரோல்களை சிக்கியவர் சில ஆண்டுகளாகவே தன் உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஃபிட்னஸ் குஷ்பு
இதையடுத்து, உடல் மெலிந்து காணப்படும் தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்போது, அதைவிடவும் மெலிதாக சைஸ் ஜீரோ போன்ற உடலமைப்புடன் தான் இருக்கும் புகைப்படதை குஷ்பு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இதனைப் பார்த்து பலர் அலருக்கு தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒருவர், குஷ்புவின் எடை இழப்பு குறித்தும் அவரை விமர்சித்தும் கமெண்ட் செய்திருந்தார்.
உடல் எடையை குறைத்த குஷ்பு சுந்தர்
பச்சை நிற ஸீக்வின் ஆடையில் சுருண்ட தலை முடியுடன் குஷ்பு தான் உடல் எடை குறைந்து காணப்படும் போட்டோக்களை பகிர்ந்தார். அந்தப் பதிவில்ஸ “நான் மீண்டும் வந்துவிட்டேன்! எனக் கூறி பச்சை நிற இதய எமோஜியை பதிவிட்டிருந்தார். அவவரது இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.
நெட்டிசனுக்கு பதிலடி
ஆனால், ஒரு ரசிகர் மட்டும், “இது மவுன்ஜாரோ ஊசியின் மாயாஜாலம். உங்களை பின்தொடர்பவர்களுக்கும் இதைத் தெரிவிக்கவும், அவர்களும் ஊசி போட்டுக்கொள்ளலாம்” என்று எழுதியுள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டை டேக் செய்த குஷ்பு, “உங்களைப் போன்றவர்கள் இருப்பது எவ்வளவு வேதனை. நீங்கள் உங்கள் முகங்களை காட்ட மாட்டீர்கள், ஏனெனில் உங்களுக்குள் அசிங்கமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பெற்றோர்களை பார்க்கத் தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது” என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
எடை இழப்பு ஊசி
எடை இழப்பு ஊசிகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முதல் பிரபலம் குஷ்பு அல்ல. தமிழ், ஹிந்தி என அனைத்து சினாமா உலகை சார்ந்தவர்களும் இந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கின்றனர். உதாரணத்திற்கு பாலிவுட்டை சேர்ந்த கரண் ஜோஹர் மற்றும் ராம் கபூர் சமீபத்தில் இதேபோல் குற்றம் சாட்டப்பட்டனர், மேலும் அவர்கள் எடை இழப்புக்கு வேறு எந்த முறையையும் பயன்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்த வேண்டியிருந்தது.
பிஸியான குஷ்பு
குஷ்பு இந்த ஆண்டு தமிழ் படமான நேசிப்பயாவில் நடித்தார், அதோடு டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரோஜினி எனும் தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார், மேலும் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
அதற்கு அப்பால், அவர் தனது கணவர் இயக்குனர் சுந்தர்.சி-யின் படங்களை தீவிரமாகப் பிரபலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். சுந்தர் தற்போது நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வருகிறார். மேலும் அவர் வடிவேலுவுடன் சேர்ந்து கேங்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில், நடிகை நயன்தாரா, படப்பிடிப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் என்ற வதந்திகளை குஷ்பு முடிவுக்கு கொண்டு வந்தார். குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் மகள் அவந்திகா விரைவில் திரையில் அறிமுகமாக உள்ளார்.
