'பிச்சை போட்டவர் நயன்தாரா.. பழிவாங்கணும்ன்னு நெனச்சா பாம்பு கூட தோத்துடும்'- கெட்டவன் டைரக்டர்
நடிகை நயன்தாரா நெல்சனுக்கு சினிமா பிச்சையையும், விக்னேஷ் சிவனிற்கு வாழ்க்கை பிச்சையும் போட்டவர் என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்தார். அந்த சமயத்தில் அவர் சினிமாவில் கம் பேக் கொடுக்க நினைத்து வெறிகொண்டு வேலை செய்தார். அந்த சமயத்தில் தான் அவர் பல கதைகளை தேர்வு செய்து நடித்தார். அத்துடன் அவர் கதாநாயகியை மையப்படுத்திய கதையிலும் நடித்து வந்தார்.
பழிவாங்கும் நயன்தாரா
இந்நிலையில், நயன்தாராவின் வெறித்தனமான வேலைக்கும், கதாநாயகிகளை சுற்றி அமையும் படத்திற்கும் காரணம் பழிவாங்கும் செயல் தான். பாம்பு கூட பழிவாங்குமான்னு தெரியாது. . ஆனால் நயன்தாரா முடிவெடுத்தால் அவ்வளவு தான் என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து கிங் உட்ஸ் டிவி எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், நயன்தாரா குறித்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
சிம்புவால் போன வாய்ப்பை கொடுத்த நயன்தாரா
நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த சமயத்தில் தான் நயன்தாராவுடனும் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. நயன்தாராவுக்கு சிம்புவுடன் பிரேக் அப் ஏற்பட்டது. அதே சமயத்தில் சிம்பு நெல்சன் கூட்டணியில் உருவாகி வந்த படமும் ட்ராப் ஆனது.
