கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..

கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 27, 2025 04:43 PM IST

ஹைபிரீட் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் கலீத் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சாவை கேரள ஊழியர்கள் சம்மேளனம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..
கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..

ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய இயக்குநர்கள்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கொச்சியில் உள்ள கோஸ்ரீ பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிரபல மலையாள சினிமா இயக்குநர்கள் கலீத் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் ஹைபிரீட் கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இயக்குநர்கள் இரண்டு பேரையும் அவர்களுடன் ஷாலிப் முகமது என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1.6 கிராம் ஹைபிரீட் கஞ்சாவை மீட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், இந்த குடியிருப்பு ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஷாலிப் இயக்குநர்களின் நெருங்கிய நண்பர் என்று அறியப்படுகிறார். அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மலையாள சினிமாவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இயக்குநர்கள் சஸ்பெண்ட்

அலாப்புழா ஜிம் கானா மற்றும் தல்லுமாளா போன்ற படங்களை இயக்கியவர் கலீத். தமாஷா மற்றும் பீமன்னிடே வாழி உள்ளிட்ட படங்களை அஷ்ரஃப் இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் விடுக்கப்பட்டனர். இந்நிலையில் 2 இயக்குநர்களையும் கேரள ஊழியர்கள் சம்மேளனம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஷைன் டாம் சாக்கோ, போதைப் பொருள் வழக்கு

ஹைபிரீட் கஞ்சா பறிமுதல் தொடர்பாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏப்ரல் 28 அன்று தெரிவித்தனர். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 21 அன்று போதைப் பொருள் பயன்படுத்தியதாக சாக்கோ கைது செய்யப்பட்டார், ஆனால் அதே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் சோதனையின் போது கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சாக்கோ தப்பி ஓடிய சம்பவம் தொடர்பான கிட்டத்தட்ட நான்கு மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்த கைது நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் சந்தேகம்

இதற்கு முன்னர், ஏப்ரல் 1 அன்று ஹைபிரீட் கஞ்சா விற்றதாக தஸ்லீமா சுல்தானா அல்லது கிறிஸ்டினா மற்றும் கே.பிரோஸ் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் தஸ்லீமாவின் கணவர் சுல்தான் அக்பர் அலியும் கைது செய்யப்பட்டார். இந்த இரு நடிகர்களுக்கும் சுல்தானா போதைப் பொருட்களை வழங்கியதாக விசாரணை குழு சந்தேகிக்கிறது.