கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?

கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?

Malavica Natarajan HT Tamil
Published Jun 06, 2025 01:18 PM IST

நடிகர் ரவி மோகன் புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்ததற்கு முன், அவர் கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?
கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?

வைரலாகும் கெனிஷா- ரவி மோகன்

அந்தப் புகைப்படத்தில், ரவி மற்றும் கெனிஷா கோவில் பூசாரிகளுடன் நின்று போஸ் கொடுத்துள்ளனர். புகைப்படங்களில், இருவரும் மாலை அணிந்து நிற்கிறார்கள். ரவி சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார், அதேசமயம் கெனிஷா குர்தா அணிந்துள்ளார். அவர்கள் தரிசனத்திற்குப் பிறகு பூசாரிகள் மற்றும் கோவில் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் குன்றக்குடி முருகன் கோவிலில் காணப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன.

ரவி மோகன் ஸ்டூடியோஸ்

பின், நேற்று ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமை, ரவி தனது புதிதாகத் தொடங்கப்பட்ட ஸ்டுடியோ, ரவி மோகன் ஸ்டுடியோஸின் லோகோவையும் அறிமுகப்படுத்தினார். "இந்த சுப தினத்தில், #RaviMohanStudios இன் லோகோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!!! விரைவில் உற்சாகமான புதுப்பிப்புகள் வரும்... காத்திருங்கள் @Ravimohanstudios," என்றார்.

அந்தப் பதிவில், நீல பின்னணியில் ஒரு பொன்னிற சிங்கத்தின் லோகோவைப் பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் அவரது பதிவில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, அவரது ஸ்டுடியோ புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

திருமணமும்- விவாகரத்தும்

கடந்த ஆண்டு செப்டம்பரில் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியிடமிருந்து பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தார். இந்த தம்பதியினர் 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவியின் பிரிவு அறிவிப்பு தனக்கு அதிர்ச்சியை அளித்ததாக ஆர்த்தி கூறினார்.

அவதூறு கருத்துகள்

இது தொடர்பான கருத்துகள் ரவி மற்றும் ஆர்த்தி தரப்பு தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், நீதிமன்றத்திலும் கையாண்டு வந்த நிலையில், நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் இணைந்து சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டது பிரச்சனையை மேலும் பெரிது படுத்தியது.

நீதிமன்றம் கண்டனம்

கெனிஷா தான் தங்கள் உறவைப் பிரித்தார் என்றும் ரவி மோகன் சொல்லும் காரணங்கள் அத்தனையும் பொய் எனக் கூறியதோடு, ரவிமோகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினார். இவர்கள் இருவரின் சமூக வலைதள பதிவுகளால் கடுப்பான நீதிமன்றம் இதுபற்றி இருவரும் பொது வெளியில் பேசக் கூடாது எனக் கூறினர்.

ஆர்த்தியின் கோரிக்கை

இதையடுத்து, ஆர்த்தி ரவி தனக்கு ஜீவனாம்சம் மற்றும் மாத செலவுகளுக்காக 40 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டது பெரும் பேசுபொருளானது. இத்தகைய சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.