Keerthy Suresh: ‘எங்களுக்குள்ள எதுவுமே மாறல.. அவருதான் பாவம்.. நம் தட்டுல சாப்பாடு இருக்குன்னா அதுக்கு’ -கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh: நம் தட்டில் இருக்கும் அனைத்தும், அவர்கள் நமக்காக செய்தவை; இது நன்றியுணர்வின் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாக இது எப்போதும் என்னுடைய அணி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கிறது. - கீர்த்தி சுரேஷ் சிறப்பு பேட்டி!

நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் நடந்தது; இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்தார்.
ஆண்டனிக்கு அது பழகவில்லை
அப்போது பேசிய அவர், “உண்மையைச் சொன்னால், எதுவும் பெரிதாக மாறவில்லை; இந்த கல்யாணத்தின் மூலம் நிறைய கவனம் எங்கள் மீது திரும்பி இருக்கிறது. எனக்கு அது பழகிவிட்டது. ஆனால் ஆண்டனி அப்படி இல்லை. இதுதான் அவருக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
இந்த திருமணத்தின் மூலமாக, இரு குடும்பங்கள் ஒன்றாக இணைந்திருப்பதுதான் இங்கு இதனை வித்தியாசப்படுத்தி இருக்கிறது. நாங்கள் மிக நீண்ட காலமாக ஒன்றாக இருந்ததால், எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய மாற்றம் இல்லை; ஆனால், இரு குடும்பங்கள் இணைந்து இருப்பதால், அதன் மூலம் உருவாகும் அழகான நினைவுகள் வித்தியாசமாக இருக்கின்றன.
எனக்கு தல பொங்கல்
மேலும் பேசிய அவர், ‘இது எங்கள் திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பொங்கல்; இது இதனை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றி இருக்கிறது. இது எனக்கு தல பொங்கல்; கடந்த மாதம் திருமணத்திற்குப் பிறகு கிறிஸ்துமஸ் வந்தது. அதனை நாங்கள் ஆண்டனி வீட்டில் கொண்டாடினோம். இந்த பொங்கலை திருவனந்தபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில் கொண்டாடினோம். இது முழுக்க, முழுக்க குடும்பத்திற்கான நேரம்.” என்றார்.
மேலும் பேசுகையில், "பொங்கல் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை, ஏனென்றால் அது புத்தாண்டுக்குப் பிறகு வரும் முதல் பண்டிகை; இது மிகவும் அழகானது. ஏனெனில் இது அறுவடை கொண்டாட்டம்; விவசாயிகள் நமக்காக என்ன செய்கிறார்கள் என்பதற்கான கொண்டாட்டம்.
நம் தட்டில் இருக்கும் சாப்பாடு
நம் தட்டில் இருக்கும் அனைத்தும், அவர்கள் நமக்காக செய்தவை; இது நன்றியுணர்வின் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாக இது எப்போதும் என்னுடைய அணி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கிறது.
இந்த பண்டிகையில் நீங்கள் இடத்தை அலங்கரிக்கிறீர்கள். அது காரணமாக அனைத்தும் வண்ணமயமாக மாறியிருக்கிறது; புத்தம் புது ஆடைகளை அணிகிறீர்கள்; நாங்கள் விளையாட்டில் ஈடுபட்டோம்.’ என்று பேசினார்.
திருமணத்திற்கு பின்னரும் நடிப்பு
மேலும் பேசிய அவர், ‘தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைப் பொறுத்தவரை 2024 -ன் முடிவு எனக்கு மிகச் சிறந்தாகவே இருந்து இருக்கிறது. திருமணம் முடிந்து நான் வேலைக்கு திரும்பிவிட்டேன்.
டப்பிங் பேசிக்கொண்டு இருக்கிறேன்; புது படங்களுக்கு கையெழுத்து போட்டு இருக்கிறேன்; கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.’ என்று பேசினார்.
-Akash Bhatnagar
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்