Keerthi Pandian: ‘குறை சொல்லணும்னு நினைக்கிறவங்க என்ன பண்ணாலும்.. எதுங்க அழகு..’ - கீர்த்திபாண்டியன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Keerthi Pandian: ‘குறை சொல்லணும்னு நினைக்கிறவங்க என்ன பண்ணாலும்.. எதுங்க அழகு..’ - கீர்த்திபாண்டியன் பேட்டி!

Keerthi Pandian: ‘குறை சொல்லணும்னு நினைக்கிறவங்க என்ன பண்ணாலும்.. எதுங்க அழகு..’ - கீர்த்திபாண்டியன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 27, 2024 05:47 AM IST

அதற்கு பதில் கொடுத்தாலும் பேசுவார்கள். பதில் கொடுக்கவில்லை என்றாலும் பேசுவார்கள். இங்கு சூழ்நிலை இப்படி இருக்கும் பொழுது, அவர்கள் பேசும் பேச்சுக்கு நாம் ஏன் பதில் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் அவர்களுக்கு நான் தனி கவனம் கொடுப்பதில்லை.

கீர்த்தி பாண்டியன்!
கீர்த்தி பாண்டியன்!

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “உலகம் ஓடிக்கொண்டிருக்கும் ரன்னிங் ரேசில் நான் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை புரிய வைக்க முடியாது என்றும் நினைக்கிறேன். காரணம், அதை புரிய வைத்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு குறை சொல்வார்கள்; புரிய வைக்கவில்லை என்றாலும் குறை சொல்வார்கள். 

அதற்கு பதில் கொடுத்தாலும் பேசுவார்கள். பதில் கொடுக்கவில்லை என்றாலும் பேசுவார்கள். இங்கு சூழ்நிலை இப்படி இருக்கும் பொழுது, அவர்கள் பேசும் பேச்சுக்கு நாம் ஏன் பதில் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் அவர்களுக்கு  நான் தனி கவனம் கொடுப்பதில்லை. 

நான் செய்கிற வேலையை மிகவும் உண்மையாக  நேசித்து செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பாவாக அருண்பாண்டியனையும், கணவராக அசோக் செல்வனையும் பெற்றதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். காரணம் என்னவென்றால், சிறு வயதிலிருந்தே என்னுடைய அப்பா என்னை ஒரு பெண்ணாக மட்டும் அடையாளம் செய்யவில்லை. என்னையும் ஒரு தனிநபராக பார்த்தார். ஆகையால் உன்னால் இது மட்டுமே முடியும், இதெல்லாம் முடியாது என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது.

அதே மாதிரியான  ஒரு சூழ்நிலையைதான் அசோக் செல்வன் தற்போது எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் தேர்ந்தெடுக்கும் கதைகள், கதாபாத்திரங்கள் என்னை சௌகரியமான நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று நினைப்பேன்.  

காரணம் அப்படி ஒரு சௌகரியமான நிலைக்கு என்னை அந்த கதாபாத்திரம் எடுத்துச் சென்றால், அந்த கதாபாத்திரத்தை என்னால் முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்த முடியாது. இந்த பாடத்தை நான் தியேட்டரில் செய்த நாடகங்களின் வழியே கற்றுக் கொண்டேன். 

அந்த கதாபாத்திரம் என்னை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அந்த சவாலை எதிர்கொண்டு, நான் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். 

ஒரு வேளை அது தோல்வியில் முடியும் பொழுது, அது எனக்கு ஒரு பாடமாக அமையும். என் அப்பா அடிக்கடி சொல்வார். உன் தோல்வியில் இருந்து தான் நீ  பாடங்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, வெற்றியில் இருந்து இல்லை என்று…  இன்றும் நான் அதை தான் பின்பற்றுகிறேன்

என்னை பொருத்தவரை அழகு என்பது நீங்கள் உங்கள் உள்ளத்தில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதும், சக நபரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் உள்ளடக்கியது. அதுதான் அழகு. நீங்கள் என்னிடம் பேசும் பொழுது, பழகும் பொழுது, நான் நன்றாக உணரவில்லை என்றால் அதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது”  இவ்வாறு அவர் அந்த பேட்டியில் பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.