Kayal Serial: தவிப்பில் தேவி.. குழப்பத்தில் விக்னேஷ்.. நம்பிக்கை தரும் கயல்.. கயல் சீரியலில் இனி என்ன நடக்கப்போகிறது?
Kayal Serial: கயல் சீரியலலில் தேவிக்கான வளைகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், விக்னேஷ் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Kayal Serial: அன்பு- ஷாலினி திருமணத்தால் நின்று போன தன் தங்கை தேவியின் வளைகாப்பை நடத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறாள் கயல். இருப்பினும், தேவியின் ஆசைப்படி அவரது புகுந்த வீட்டார் ஆசியுடன் இந்த வளைகாப்பு நடக்க வேண்டும் என எண்ணி, பல முயற்சிகளையும் செய்து வருகிறார்.
தொடங்கிய வளைகாப்பு விழா
இந்நிலையில், விக்னேஷ் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையால், கயல் தேவியின் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கோவிலில் தொடங்கினார். சிறிது நேரத்தில் சொந்த பந்தம் ஒவ்வொருவராக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரத் தொடங்கினர்.
கண் கலங்கிய விக்னேஷ்
ஆனால், இன்னொரு பக்கம், அம்மா வேதவள்ளியின் பேச்சை தட்ட முடியாமலும், தன் மனைவியின் வளைகாப்பிற்கு செல்ல வேண்டும் என்ற ஆதங்கமும் ஏங்க விக்னேஷ் கலங்கி இருக்கிறார். இரண்டு எண்ணங்களும் மாறி மாறி வர துக்கத்தை தாங்காமல் கண்ணில் கண்ணீரோடு என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வடிவு
இந்நிலையிலே, தன் கணவர் விக்னேஷின் வருகையை எதிர்பார்த்து, கோயிலில் காத்திருக்கிறார் தேவி. இதையெல்லாம் பார்த்த கயலின் பெரியம்மா வடிவு, கயல் இத்தனை வேலையும் செய்கிறாள் என்றாள் எல்லாம் அந்த விக்னேஷ் இங்க வருவான் என்ற நம்பிக்கையில் தான என எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்.
சமாதானம் செய்யும் கயல்
நேரம் ஆக ஆக தேவிக்கு மட்டுமல்ல, கயல் வீட்டாருக்கும் விக்னேஷ் வருவாரா என்ற சந்தேகம் அதிகரிக்கத் தொடங்கியது. இதை கயலிடமே கேட்க. யாரும் பதற்றப்பட வேண்டாம். எனக்கு விக்னேஷ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. எல்லாரும் அமைதியாய் இருங்கள். குழம்ப வேண்டாம் என சமாதானம் செய்கிறாள்.
அசிங்கப்பட்ட சரவண வேலு
இந்த சமயத்தில் தேவியின் வளைகாப்பிற்கு அழையா விருந்தாலியாக வந்துள்ளார் சரவண வேலு. கயல் அம்மா காமாட்சியிடம் வளைகாப்பு விவரங்களை கேட்டபோது, அவர் முகத்தில் அடித்தார் போல, இந்த இடத்தை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இதனால் சரவண வேலுவும் அவரது சித்தப்பாவும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தனர். இதை எல்லாம் கயலின் தங்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
உண்மை அறிந்த வேதவள்ளி
முன்னதாக, விக்னேஷ் பெயரில் அனுப்பப்பட்ட பிரியாணியை சாப்பிட்டு ஷாலினி மயங்கி விழுந்தார். இதை அறிந்த வேதவள்ளி, தன் மகளைக் காண கயல் வீட்டிற்கு வந்து, அவர்களை மிரட்டினார். அப்போது, உள்ளே வந்த எழில், பிரியாணியில் விஷம் கலந்து விக்னேஷ் பெயரில் பார்சலை அனுப்பியது உங்கள் அண்ணன் தான் என கூற, அவமானத்தால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்