சிவசங்கரிக்கு கயல் கொடுத்த எச்சரிக்கை.. துள்ள துடிக்க கொல்ல நினைக்கும் தயாளன்.. கயல் எபிசோடு அப்டேட்!
கயல் சீரியலில் கயல் சிவசங்கரிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறார். அந்த எச்சரிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.

சிவசங்கரிக்கு கயல் கொடுத்த எச்சரிக்கை.. துள்ள துடிக்க கொல்ல நினைக்கும் தயாளன்.. கயல் எபிசோடு அப்டேட்!
கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், மூர்த்தி கத்திக்குத்து பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், கல்யாண கோலத்தோடு கயலும் எழிலும், அவர்களது குடும்பத்தினரும், அங்கு பதைப்பதைப்போடு காத்துக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே தனியாக வந்த சிவசங்கரியிடம் வந்த கயல், எனது அண்ணனை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்தது நீங்களாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று கூறி, எனக்கு ஒரு நல்ல மாமியாராக இருந்தீர்கள் என்றால்…. என்று எச்சரிக்கை விடுக்கிறாள். இதற்கிடையே கண் விழித்த மூர்த்தி நான் இந்த சமயத்தில் கயலின் பக்கத்தில் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறினான். ” தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.