Kayal Serial: கயல் திருமணமே இன்னும் முடியல.. அதுக்குள்ள ஆனந்திக்கு திருமணமா? - சதித்திட்டம் தீட்டிய வடிவு
Kayal Serial: கயலின் உறவினர் மனோஜுக்கு திருமண வரன் வேண்டி காமாட்சியிடம் பேசுகிறார். உடனே வடிவு, எதற்கு வெளியே வரன் பார்க்க வேண்டும்? ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க காமாட்சிக்கு ஆசை இருக்காதா? என புது வெடியை கொளுத்தி போட்டார்.
Kayal Serial: தமிழ் பார்வையாளர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்களை அதிகம் பிரித்து பார்ப்பதில்லை. இரண்டிற்கும் அதே அளவு அன்பையும், பாராட்டுகளையும் பொழிகிறார்கள்.
மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.
டி. ஆர். பியில் மாஸ்
அதே சமயம், ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் திரையிடப்பட்டடு வரும் சீரியல் கயல். சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல சீரியல்களில் இதுவும் முக்கியமான ஒன்று.
முதலில் டி. ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த கயல் தற்போது இரண்டாவது இடத்திற்கு நகர்ந்து சென்று இருக்கிறது.
கயல்
பிரபல தொலைக்காட்சி நடிகையான சைத்ரா ரெட்டி, கயல் என்ற பாத்திரத்தில் தலைப்பு கேரக்டரில் நடித்து உள்ளார். இது அந்தக் கதாபாத்திரம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி போராடுகிறார் என்பதைச் சுற்றி வருகிறது. அவர் குடும்பத்தின் ஒரே நபராக சம்பாதிப்பவர். ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் கயலின் அமைதியான காதலனாக எழில் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.
காதலுக்கு பச்சை கொடி காட்டாமல் இருந்த கயல், இறுதியாக எப்படியோ எழிலுக்கு சரி என சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணம் வேலை சென்று கொண்டு இருக்க எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தது.
புது குழப்பம்
ஜாதகம் பொருத்தம் கயல், எழிலுக்கு சரியாக இல்லாத காரணத்தினால் புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கயலை கொலை செய்ய எழிலின் தாய் முயன்றதால் அவர் மேலும் மனம் உடைந்தார். இறுதியாக ஜாதகம் காரணமாக எழிலின் நன்மையை கருதி காதலை கைவிட முடிவு செய்து இருக்கிறார் கயல்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் கயல் சீரியலின் இன்றைய ( ஜூலை 15 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
கயலிடம் அவரின் தோழி, ‘ எழில் உயிருக்கு ஆபத்து என்பதால் தீபிகாவிற்கு நீ விட்டு தர. உன்ன பயங்கராம லவ் செய்யும் அவர், நீ இல்லாம வாழ்ந்திட முடியுமா? ‘ என கேட்கிறார்.
ஆனந்திக்கு திருமணம்
கயலின் உறவினர் மனோஜுக்கு திருமண வரன் வேண்டி காமாட்சியிடம் பேசுகிறார். உடனே வடிவு, எதற்கு வெளியே வரன் பார்க்க வேண்டும்? ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க காமாட்சிக்கு ஆசை இருக்காதா? என புது வெடியை கொளுத்தி போட்டார்.
மறுபக்கம் கயல், எழிலின் தாய்க்கு போன் செய்து, ’உங்க மிரட்டலுக்கு எழிலை விட்டு போகல, அவன் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்று தான் போறேன். உங்க பூச்சாண்டிக்கு பயந்து போகல” என்றார். அத்துடன் இன்றைய ( ஜூலை 15 ) எபிசோட்டிற்கான ப்ரோமொ முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்