Kayal Serial: இருக்க பிரச்சன போதாதுன்னு இவன் வேற.. கயலை கடுப்பாக்கும் சரவண வேலு..
Kayal Serial: கயல் எனக்கு தோழி மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என சரவண வேலு சத்தியம் செய்கிறான்.

Kayal Serial: கயல் வீட்டினர் ஏற்பாடு செய்த வளைகாப்பிற்கு தான் வர வேண்டுமானால் என் அம்மா முதலில் தேவியை மன்னிக்க வேண்டும் என விக்னேஷ் கூறினார்.
சூடான வேதவள்ளி
இதனால், கயல் உமன்ஸ் கிளப்பில் இருக்கும் வேதவள்ளியைக் காண செல்கிறாள். அப்போது, கயலைப் பார்த்ததும் கோவமடைந்த வேதவள்ளி, கயலை தனியாக அழைத்து பேசுகிறாள். ஏற்கனவே, இங்குள்ள அத்தனை பேர் முன்னிலையிலும் என் தலைவர் பதவியை பறித்தாய். இப்போது என்ன திட்டத்தோடு வந்திருக்க என்று கேட்டு திட்டினார்.
காலில் விழ வேண்டும்
கயல் தேவியின் வளைகாப்பு பற்றி பேசியதும் சூடான வேதவள்ளி, உன் அம்மா என் காலிலும் என் பையன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அதுமட்டுமல்ல, எந்த ஆளுங்க முன்னாடி என் தலைவர் பதவி போச்சோ, அவர்கள் முன்னாடி நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் எண்பும் சொன்னார்.
குழப்பத்தில் கயல்
இதைக் கேட்டு ஷாக் ஆன கயல், இந்த விஷயத்தை எப்படி வீட்டிவ் சொல்வது, அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை யோசித்து குழம்பி நிற்கிறார். மேலும், உன் தங்கச்சி தேவிக்கும் என் பையன் விக்னேஷிற்குமே சம்பந்தம் இல்லாத போது அவ வயித்துல வளர்ற குழந்தைக்கு மட்டும் எப்படி எங்க குடும்பத்தோட சம்பந்தம் இருக்கும் என்றும் கேட்டு கயலை காயப்படுத்தினார்.
மீண்டும் வந்த சரவண வேலு
இவர்கள் தான் இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறார்கள் என்றால் நடுவில் இந்த சரவண வேலு வேறு கயலை டார்ச்சர் செய்கிறான். சரவண வேலுவின் திட்டத்தை எல்லாம் தெரிந்து அவனை வீட்டை விட்டே கயல் துரத்தினாள்.
அத்துன் நில்லாமல் இந்த ஜென்மத்திலேயே என் முகத்தில் முழிக்கக் கூடாது. இனி உன்னை நம்பவே மாட்டேன் என கயல் சரவண வேலுவை திட்டி, கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்,
வெறும் பிரண்ட் தான்
ஆனால், இப்போது ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கும் சரவண வேலு, தன் மனதில் முன் போல் எந்த எண்ணமும் இல்லை. கயல் என்றால் இப்போது எனக்கு பிரண்ட். அவ்வளவு தான். என்னை நம்பு என சரவண வேலுவும் அவரது சித்தப்பாவும் கயலிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
எதிராக நின்ற வேதவள்ளி
முன்னதாக, ஆரம்பத்தில் இருந்தே அன்பு- ஷாலினி காதலுக்கு வேதவள்ளி தடையாகத்தான் இருந்தார். இது தெரிந்தும், இவர்களின் காதலுக்கு கயல், ஷாலினியின் அண்ணன் விக்னேஷ் என எல்லோரும் ஆதரவாகத் தான் இருந்தனர்.
சவால் விட்ட கயல்
அவர்கள் அனைவருமே, அன்பு போலிஸ் ட்ரெயினிங் முடித்து வேலை வாங்கும் வரை காத்திருக்குமாறு மட்டும் தான் கூறினர். அதுமட்டுமில்லாமல், கயல், ஷாலினிக்கு வேறு கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததை அறிந்து, வேதவள்ளியிடமே போய், ஷாலினிக்கும் அன்புவிற்கும் தான் கல்யாணம் நடக்கும். அதை நான் நடத்தியும் காட்டுவேன் என்றெல்லாம் சவால் விட்டார்.
திருட்டுக் கல்யாணம்
இதனால், ஆத்திரமடைந்த வேதவள்ளி, கயலின் அம்மாவிடம் எச்சரித்து அனுப்பினார். இதனால் கயல் அம்மா மனமுடைந்தார். மேலும், ஷாலினியை அன்புவிடம் இருந்து தள்ளி இருக்குமாறும் கூறினார். அதுவரை அமைதியாக இருந்த ஷாலினி அன்பு அம்மா மூலம் வேதவள்ளியின் திட்டத்தை எல்லாம் தெரிந்து கொண்டார்.
இதனால், அவசரத்திலும் பயத்திலும் என்ன செய்வது எனத் தெரியாமல் அன்புவிற்கு போன் செய்து அவரை வரவழைத்து கோயிலில் திருட்டுத் தனமாக கல்யாணம் செய்து கொண்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்