Kayal Serial: அரெஸ்ட் செய்யப்படும் அன்பு.. தவிக்கும் குடும்பம்.. கோவத்தில் கயல்..
Kayal Serial: ஷாலினியை வீட்டிலிருந்து கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதாக வேதவள்ளியும் அவரது அண்ணனும் கொடுத்த புகாரின் பேரில் அன்பு கைது செய்யப்பட்டுள்ளான்.

Kayal Serial: அரெஸ்ட் செய்யப்படும் அன்பு.. தவிக்கும் குடும்பம்.. கோவத்தில் கயல்..
Kayal Serial: அன்பு வீட்டிற்கு தெரியாமல் ஷாலினியை அவசர அவசரமாக கல்யாணம் செய்ததால் கோவமடைந்த வேதவள்ளி, தன் மகளின் வாழ்க்கை சீரழிந்ததாகக் கூறி தேவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அன்பு
தேவிக்கு வளைகாப்பு செய்ய ஆசை ஆசையாய் கயல் குடும்பத்தினர் இருந்த நிலையில், குட்டையை குழப்பி தேவியின் வாழ்க்கையை சீரழித்த அன்பு மேல் எல்லாரும் கோவமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவனையும் ஷாலினியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
கைதான அன்பு
அப்படி இருந்தும் கோவம் அடங்காத வேதவள்ளி, அவரது அண்ணனிடம் நடந்ததை சொல்லி புலம்பியுள்ளார். அவர், உடன், போலீஸ் ஸ்டேஷன் சென்று அன்பு மேல் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த போலீசார் வீடு தேடி வந்து அன்புவை கைது செய்தனர்.