Kayal Serial: நிம்மதி இல்லாமல் போன கயல் குடும்பம்.. காரணத்தை கண்டுபிடித்த எழில்.. இனி நடக்கப் போவது என்ன?
Kayal Serial: வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மயங்கி விழுந்ததால், அவருக்கு என்ன ஆனதோ என பதறி ஹாஸ்பிட்டலில் சேர்த்த நிலையில், பிரச்சனைக்கான காரணம் என்ன என எழில் கண்டுபிடிக்கிறார்.

Kayal Serial: தேவியின் வளைகாப்பிற்காக வீட்டில் உள்ளவர்கள் நகை வாங்க கடைக்கு சென்றனர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த ஷாலினி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு என்ன ஆச்சு எனத் தெரியாமல் கயலின் அம்மா காமாட்சியும், தேவியும் பதறினர்.
ஷாலினி உயிருக்கு ஆபத்து
பின், இவர்கள் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சிர்கு கால் செய்தனர். பின் வீட்டில் இருப்பவர்களிடமும் அதுபற்றி கூறியுள்ளனர். பின், நகை வாங்க சென்றவர்கள் அவசரமாக வந்தனர்.
ஷாலினிக்கு ஏற்பட்ட நிலை குறித்து, அன்புவிற்கு தகவல் சொல்வதற்காக அவரது தங்கை போன் செய்து விஷயத்தை கூறினார். ஆனால், நடந்தது என்ன எனக் கேட்காமலே அன்பு தன் வீட்டில் இருப்பவர்கள் தான் ஷாலினியின் இந்த நிலைக்கு காரணம் என நினைத்து கோவமாக பேசுகிறான். ஆனால், அதுகுறித்து எவ்வளவோ எடுத்து கூற முயற்சித்தும் அது அவனுக்கு புரியவில்லை.
உண்மையை கண்டுபிடித்த எழில்
இந்நிலையில், ஹாஸ்பிட்டலுக்கு வந்த கயல் எழிலிடம் கயல் அம்மா காமாட்சி என்ன நடந்தது என கூறினார். அப்போது, விக்னேஷ் பெயரில் வீட்டிற்கு ஒரு பிரியாணி பார்சல் வந்தது. அதனால் தான் இப்படி ஆகிருக்கும் எனக் கூறினார். இதுபற்றி ஆழமாக யோசித்த எழில், அந்த பிரியாணியை ஷாலினியைத் தவிர வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. அப்போ, அதில் தான் விஷம் கலந்திருக்கும் என அழுத்தி கூறினார். இதனால் மொத்த குடும்பமும் ஷாக்கில் நின்றது.
உண்மை என்ன?
இதையடுத்து, பிரியாணி பார்சல் அனுப்பியவர் யார், விக்னேஷ் தான் உண்மையிலேயே அனுப்பினாரா அல்லது அவர் பெயரை பயன்படுத்தி நடந்த சதி திட்டம் இதுவா, தேவியின் வளைகாப்பு சொன்னபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கோவத்தில் வேதவள்ளி
முன்னதாக, தேவியின் வளைகாப்பிற்கு விக்னேஷ் நிச்சயம் வருவார் என கயல் கூறியதால் அப்செட் ஆன வடிவு, நேராக வேதவள்ளிக்கு போன் செய்து அவரின் ஈகோவை தூண்டி விடுகிறார். அத்துடன் நில்லாமல் விக்னேஷ் மீது கயல் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் சொல்லி வேதவள்ளியை கோவப்படுத்தினார்.
விக்னேஷ் பேச்சால் ஷாக் ஆன வேதவள்ளி
இதனால், கடுப்பான வேதவள்ளி, தன் மகனை பார்த்து வளைகாப்பிற்கு போகக்கூடாது என எச்சரிக்க வந்தார். அந்த சமயத்தில் தான் விக்னேஷ், அவரது நண்பரிடம் என் மனசுக்குள் வளைகாப்பிற்கு போக வேண்டும் போல் தோன்றுவதாக கூறினார். அதைக் கேட்டு ஷாக்காகி வேதவள்ளி நிற்கிறாள்.
தேவி உயிருக்கு ஆபத்து
இந்நிலையில், வேதவள்ளியின் குடும்பத்தின் இமேஜை கெடுத்த கயல் குடும்பத்தை பழிவாங்க எண்ணி வேதவள்ளியின் அண்ணன் மிக கொடூரமான வேலையில் இறங்கியுள்ளார். நாளை தேவிக்கு வளைகாப்பு நடப்பதாக உள்ள நிலையில், வேதவள்ளியின் அண்ணன் விக்னேஷ் கொடுத்ததாகக் கூறி உணவு டெலிவரி செய்யும் நபரிடம் ஒரு பார்சலை கொடுத்து அனுப்பி இருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்