Kayal Serial: தேவியின் உயிருக்கு ஆபத்து.. விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி.. என்ன செய்ய போகிறார் கயல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: தேவியின் உயிருக்கு ஆபத்து.. விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி.. என்ன செய்ய போகிறார் கயல்..

Kayal Serial: தேவியின் உயிருக்கு ஆபத்து.. விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி.. என்ன செய்ய போகிறார் கயல்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 11, 2025 06:50 AM IST

Kayal Serial: விக்னேஷ் அனுப்பியதாக தேவிக்கு அனுப்பப்பட்ட உணவு பார்சலால் தேவியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

Kayal Serial: தேவியின் உயிருக்கு ஆபத்து.. விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி.. என்ன செய்ய போகிறார் கயல்..
Kayal Serial: தேவியின் உயிருக்கு ஆபத்து.. விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி.. என்ன செய்ய போகிறார் கயல்..

வன்மத்தை கக்கும் வடிவு

தேவியின் வளைகாப்பிற்கு வளையல் வாங்க வேண்டி இருந்ததால், தன் பெரியப்பா பெரியம்மா, அண்ணன், அண்ணி எழிலுடன் நகைக் கடைக்கு செல்கிரறார் கயல். அங்கு சாதாரணமாக பேசுவது போல, கயலின் வறுமையையும் ஏழ்மையையும் குத்திக்காட்டி பேசுகிறரா் வடிவு.

அதேசமயம், தேவியின் வளைகாப்பிற்கு விக்னேஷ் நிச்சயம் வருவார் என கயல் கூறியதால் அப்செட் ஆன வடிவு, நேராக வேதவள்ளிக்கு போன் செய்து அவரின் ஈகோவை தூண்டி விடுகிறார். அத்துடன் நில்லாமல் விக்னேஷ் மீது கயல் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் சொல்லி வேதவள்ளியை கோவப்படுத்தினார்.

விக்னேஷ் பேச்சால் ஷாக் ஆன வேதவள்ளி

இதனால், கடுப்பான வேதவள்ளி, தன் மகனை பார்த்து வளைகாப்பிற்கு போகக்கூடாது என எச்சரிக்க வந்தார். அந்த சமயத்தில் தான் விக்னேஷ், அவரது நண்பரிடம் என் மனசுக்குள் வளைகாப்பிற்கு போக வேண்டும் போல் தோன்றுவதாக கூறினார். அதைக் கேட்டு ஷாக்காகி வேதவள்ளி நிற்கிறாள்.

தேவி உயிருக்கு ஆபத்து

இந்நிலையில், வேதவள்ளியின் குடும்பத்தின் இமேஜை கெடுத்த கயல் குடும்பத்தை பழிவாங்க எண்ணி வேதவள்ளியின் அண்ணன் மிக கொடூரமான வேலையில் இறங்கியுள்ளார். நாளை தேவிக்கு வளைகாப்பு நடப்பதாக உள்ள நிலையில், வேதவள்ளியின் அண்ணன் விக்னேஷ் கொடுத்ததாகக் கூறி உணவு டெலிவரி செய்யும் நபரிடம் ஒரு பார்சலை கொடுத்து அனுப்புகிறார்.

தன் மீது கோவமாக இருந்தாலும் விக்னேஷிற்கு பாசமும் இருக்கிறது என நினைத்து, உணவு பார்சலை பிரித்து தேவி ஆசை ஆசையாக சாப்பிட உள்ளார். இந்த சாப்பாட்டில் என்ன இருக்கிறது. இதனால்,தேவிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேருமா என்ற குழப்பத்தில் கயல் சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.

எழிலை சங்கடப்படுத்தும் கயல்

அதே வேளையில், கயல் நகைக் கடையில் தனக்கு நகை எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை கூறுவகைக் கேட்ட எழில் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார. கயல், நகை வாங்கும் அளவிற்கு நான் பணக்காரி இல்லை என்றும், என் புருஷனால் இப்போது ஏதும் வாங்கித் தர முடியாமல் இருக்கலாம் ஆனால், நிச்சயம் ஒருநாள் அவர் நகை எல்லாம் வாங்கித் தருவார் எனகய் பேசியதை கேட்ட எழில், தன்னால் கயலின் சின்ன சின்ன ஆசைகளை கூட நிறைவேற்ற முடியாமல் போனதை நினைத்து வேதனை படுகிறார். இதற்கிடையில், கயல் சீரியலில் என்ன நடக்கும், கயல் சொன்னபடி வளைகாப்பை நடத்துவாரா, தேவி சாப்பிட்ட உணவில் என்ன இருந்தது. விக்னேஷை வேதவள்ளி தடுத்து நிறுத்துவாரா என்ற கேள்விகளுடன் கயல் சீரியல் நேயர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.