Kayal Serial: ஜாதகம் விஷயத்தில் வந்த கிடைத்த புது யோசனை.. கயல் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ஜாதகம் விஷயத்தில் வந்த கிடைத்த புது யோசனை.. கயல் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்

Kayal Serial: ஜாதகம் விஷயத்தில் வந்த கிடைத்த புது யோசனை.. கயல் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்

Aarthi Balaji HT Tamil
Published Jul 16, 2024 10:45 AM IST

Kayal Serial: எழிலை திருமணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் கயலிடம் அவரது தோழி எப்படியாவது திருமணம் செய்து வைக்க முயல்கிறார்.

ஜாதகம் விஷயத்தில் வந்த கிடைத்த புது யோசனை.. கயல் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்
ஜாதகம் விஷயத்தில் வந்த கிடைத்த புது யோசனை.. கயல் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்

அதில், மருத்துவமனையில் தோழிக்கு பிறந்தநாள் ஏற்பாடு செய்து இருக்கிறார் கயல். கேக் வெட்டி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க அந்த பக்கம் மருத்துவர் கெளதம் வந்து நிற்கிறார். அந்த இடத்திற்கு தொடர்பே இல்லாத அவர் எப்படி புகைப்படத்திற்குள் வந்தார் என அனைவரும் ஷாக்கானார்கள்.

ஆனந்தி, மனோஜுக்கு திருமணம்

மறுபக்கம் ஆனந்தி, மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க சொன்ன கதை வந்தது. ஆனந்தி, மனோஜுக்கு எப்படி திருமணம் செய்ய முடியும் என தன்னிடம் இருக்கும் காசு விஷயத்தை பற்றி பேசுகிறார் உறவினர். குடும்பமே சோகம் அடைந்தார்கள்.

கயலுக்கு யோசனை கொடுத்த தோழி

எழிலை திருமணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் கயலிடம் அவரது தோழி எப்படியாவது திருமணம் செய்து வைக்க முயல்கிறார். ஜாதகம் காரணமாக எழிலை விட்டு கொடுக்க நினைக்கிறாய், ஏன் சிவசங்கரி அந்த ஜாதகம் பார்க்கும் நபரை ஏற்பாடு செய்து இருக்க கூடாது என புது கேள்வியை எழுப்பினார். தோழி சொன்னதும் சரி என கயலுக்கு தோன்றுகிறது. இதனால் எங்கோ அவர் கிளம்பி செல்வது போல் ப்ரோமோ முடிந்தது. மீதம் என்ன நடக்க போகிறது என்பதை இன்று ( ஜூலை 16 ) இரவு 7.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

கயலிடம் அவரின் தோழி, ‘எழில் உயிருக்கு ஆபத்து என்பதால் தீபிகாவிற்கு நீ விட்டு தர. உன்ன பயங்கராம லவ் செய்யும் அவர், நீ இல்லாம வாழ்ந்திட முடியுமா? ‘ என கேட்கிறார். பின்னர் சாமி முன்பாக நின்று கொண்டு ரோஜா இதழை பிரிக்க சொல்கிறார். இறுதியாக யார் பக்கம் நிற்கிறதோ அதுவே கடவுளின் விருப்பம் என சொல்கிறார். கயல், எழில் சேர வேண்டும் என நினைக்கும் எண்ணமே சரி என கடவுள் தீர்ப்பு கொடுத்தார்.

கயலின் உறவினர் மனோஜுக்கு திருமணம் கை கூடி வந்து இருக்கிறது அனைவரும் வர வேண்டும் என்று காமாட்சியிடம் பேசுகிறார். உடனே வடிவு, எதற்கு வெளியே வரன் பார்க்க வேண்டும்? ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க காமாட்சிக்கு ஆசை இருக்காதா? என புது வெடியை கொளுத்தி போட்டார். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடிக்கவே வேண்டாம் என நினைக்கும் உறவினர் முன்பாக வடிவு இப்படி சொல்லியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மறுபக்கம் கயல், எழிலின் தாய்க்கு போன் செய்து, ’உங்க மிரட்டலுக்கு எழிலை விட்டு போகல, அவன் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்று தான் போறேன். உங்க பூச்சாண்டிக்கு பயந்து போகல” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9