Kavignar Vaali Memorial Day: கவிஞர் வாலி நடித்துள்ள படங்கள் எத்தனை தெரியுமா?
15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் நினைவு நாள் இன்று.

கவிஞர் வாலி
கவிஞர் வாலி 1931ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பிறந்தார். 2013ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி காலமானார். இன்று அவரது நினைவு தினம்.
திருச்சிராப்பள்ளி ஸ்ரீநிவாசன் ரங்கராஜன் என்பது தான் இவரது இயற்பெயர். தமிழ் திரைப்படத் துறையில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர். இவர் கிட்ததட்ட 15,000 பாடல்களை எழுதியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கோலோச்சினார்.
சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கலைத் துறையில் இவரது பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதை 2007ம் ஆண்டு வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.