'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா
' முதலில் போன் பண்ணி அனுமதி கேட்டிருக்கலாம். கேட்டால் தரப்போறோம். அனுமதியும் கேட்கல. என்னோட பாட்டு, குட் பேட் அக்லி படத்தில் இருக்கு. பாடல் ஆசிரியர்னு என் பெயர் போடணுமா இல்லையா. போடல’ என இயக்குநர் கஸ்தூரி ராஜா வேதனைத் தெரிவித்து இருக்கிறார்.

'ஒத்த ரூபா என்னோட பாட்டு.. குட் பேட் அக்லி படத்தில் இருக்கு.. அனுமதியும் வாங்கல.. பாடல் ஆசிரியர்னும்போடல’: கஸ்தூரி ராஜா
'ஒத்த ரூபா தாரேன் என்னோட பாட்டு என்றும்; குட் பேட் அக்லி படத்தில் இருக்கு என்றும் அதற்கு அனுமதி வாங்கவில்லை என்றும்; பாடல் ஆசிரியர் என்று போடவில்லை என்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா பேட்டியளித்திருக்கிறார். இதுதொடர்பான பேட்டி, மே 16ஆம் தேதி, டூரிங் டாக்கிஸ் யூடியூபில் வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பு..
’கஸ்தூரிராஜா முழுக்க முழுக்க நடிகராகிட்டீங்களா?
முழுக்க முழுக்க இல்லை. மனசுக்குப் பிடிச்ச கதாபாத்திரங்கள் கிடைச்சால், ஒரு நிறைவு இருந்தால், பெயரைக் கெடுக்காமல், தரமான இயக்குநர் என்று பெயர் இருக்கு. அதற்கு சேதாரம் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களாக கிடைத்தால் நடிக்கலாம்.