Jigarthanda Double X: ரஜினி, கமலுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டர்! கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jigarthanda Double X: ரஜினி, கமலுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டர்! கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி

Jigarthanda Double X: ரஜினி, கமலுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டர்! கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 09, 2023 02:38 PM IST

நான் மட்டும் சில தசாப்தங்கள் முன்னரே பிறந்திருந்தார் ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து படம் இயக்கியிருப்பேன் என்று கூறிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஆசையை வித்தியாசமாக நிறைவேற்றியுள்ளார் அவரது இணை இயக்குநரான மகேஷ் பாலு.

ரஜினி, கமல் படங்களை மார்பிங்  செய்து கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்திருக்கும் ஜிகர்தண்டா எக்ஸ் பட போஸ்டர்
ரஜினி, கமல் படங்களை மார்பிங் செய்து கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்திருக்கும் ஜிகர்தண்டா எக்ஸ் பட போஸ்டர்

கார்த்திக் சுப்பராஜின் இந்த டுவிட் பதிவை ரசிகர்கள் பலரும் லைக்குகளை க்ளிக் செய்து ரீடுவிட் செய்து வருவதுடன், "இது மட்டும் நடந்த மிகப் பெரிய வெற்றி படமாக அமையும்", இவர்கள் இணையும் படத்துக்கு Once Upon A Time in Kollywood என டைட்டில் வைக்கலாம் எனவும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் இணையும் படம் சிறந்த பிரியாவிடை படமாகவும் இருக்கும் எனவும், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லேகேஷ் கனகராஜ் ஆகியோர் இந்த ஐடியாவை செயல்படுத்த முயற்சிக்கலாம் எனவும் ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2019இல் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

கார்த்திக் சுப்பராஜ் 2014இல் தனது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

1975ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டும் வரும் சிவப்பாக, வெள்ளை நிறத்தில்தான் ஹீரோ இருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி அமைக்கும் விதமாக கேங்ஸ்டராக கருப்பு நிறத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸை ஹீரோவாக வைத்து இயக்குநர் சத்யஜித்ரேவின் முன்னாள் உதவியாளராக இருந்த எஸ்ஜே சூர்யா படம் இயக்குவது போல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைக்கதை அமைந்துள்ளது.

இந்த படத்தில் நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, ஷைன் டோம் சாக்கோ ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2014இல் வெளியான ஜிகர்தண்டா படத்தின் முன் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: