கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எப்படி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எப்படி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!

கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எப்படி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 06, 2025 08:45 AM IST

தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒருவனை, வாழ்க்கை எந்த கட்டத்திற்கும் கொண்டு செல்லும் என்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி எனக்கு பட்டது. அந்தக்காட்சி படத்தில் 15 நிமிடமாக வரவேண்டும் இருக்க வேண்டும் திட்டமிட்டு இருந்தேன்.

கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எபப்டி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!
கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எபப்டி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!

இந்த நிலையில், அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அவர் பேசும் போது, ‘எந்த ஒரு ஃபிலிம் மேக்கருக்கும் சிங்கிள் ஷாட்டாக ஒரு காட்சியை எடுப்பது என்றால், அதில் அவருக்கு ஒருவிதமான சந்தோஷம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால் அதில் எல்லோருமே மிகவும் ஒற்றுமையாக நின்று வேலை பார்க்க வேண்டும். அதனுடைய ரிசல்ட்டும் பார்ப்பதற்கு வேறுமாதிரியான ஃபீலை கொடுக்கும்.

நான் ஜிகர்தண்டா திரைப்படத்திலும், மகான் திரைப்படத்திலும் அதை முயற்சி செய்திருந்தேன். ஒரு கட்டத்தில் படங்களில் சிங்கிள் ஷாட் வைக்க வேண்டும் என்று வைக்காமல், அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தால் மட்டும் அதனை பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்.

உண்மையில் ரெட்ரோ திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த கல்யாண மண்டப காட்சியானது முதலில் சிங்கள் ஷாட்டாக எடுப்பதற்கான திட்டம் இல்லை. அந்தக்காட்சி 2 சீன்களாகத்தான் இருந்தது; அதாவது, முதலில் கல்யாணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். அப்படியே அங்கு கனிமா பாடல் தொடங்கும். அதன் பின்னர் சூர்யாவும் அவர் அப்பாவும் பேசிக்கொள்வார்கள்; அதன் பின்னர் சண்டை என்பதாகத்தான் எழுதப்பட்டிருந்தது.

மீண்டும் அந்தக்காட்சியை எழுதும் பொழுது, தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒருவனை வாழ்க்கை எந்த கட்டத்திற்கும் கொண்டு செல்லும் என்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி எனக்கு பட்டது. அந்தக்காட்சி படத்தில் 15 நிமிடமாக வரவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.

இந்த நிலையில்தான் அந்த காட்சியை 15 நிமிட சிங்கள் ஷாட்டாக எடுத்து விடலாமே என்று தோன்றியது. காரணம், அதன் பின்னர் அந்த காட்சியில் நடக்கும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான காட்சிகள்தான் அடுத்தடுத்து நடக்கும். ஆகையால், அது சிங்கள் ஷாட்டாக எடுக்கப்படலாம் என்று தோன்றியது.

முதலில் அந்தக் காட்சியை நாங்கள் கடற்கரையில் தான் எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், கடற்கரையில் எடுக்கும் பொழுது எல்லாமே அருகருகே இருக்கும். அப்படி எடுக்கப்படும் பொழுது கேமரா மூவ்மெண்ட் அனைத்தும் ஒரே ஃப்லோவில் இருக்கும்.

ஆனால், எனக்கு மாடிக்குச் சென்று திரும்பி வந்து காட்சி எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்துதான் கல்யாண மண்டபத்தில் காட்சியை எடுக்கலாம் என்று முடிவு எடுத்தேன். அதற்கு ஏற்றப்படியான மண்டபத்தையும் தேடினோம்.

அந்தக் காட்சியை எடுக்கும் பொழுது எல்லோருமே உற்சாகமாக இருந்தார்கள். காரணம் சவால்கள் தானே எதையும் உற்சாகமாக மாற்றும். அந்தக்காட்சிக்காக தொழில்நுட்ப குழு முதலில் சென்று ஒத்திகை பார்த்தது. அதன் பின்னர் நடிகர்கள் அனைவரும் சேர்த்து ஒத்திகை பார்த்தோம். தொடர்ந்து காட்சிகளுக்கான ஆடைகள் அனைத்தையும் போட்டுக்கொண்டு மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்தோம். அதன் பின்னர்தான் அந்தக்காட்சி எடுக்கப்பட்டது’ என்று பேசினார்.