கடற்கரை டூ கல்யாணமண்டபம்.. ரெட்ரோ 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி எடுக்கப்பட்டது எப்படி தெரியுமா? -கார்த்திக் பேட்டி!
தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒருவனை, வாழ்க்கை எந்த கட்டத்திற்கும் கொண்டு செல்லும் என்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி எனக்கு பட்டது. அந்தக்காட்சி படத்தில் 15 நிமிடமாக வரவேண்டும் இருக்க வேண்டும் திட்டமிட்டு இருந்தேன்.

சூர்யா நடிப்பில் மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தப்படத்தின் ஆரம்பத்தில் கல்யாண மண்டபத்திற்குள் வைத்து எடுக்கப்பட்ட 15 நிமிட காட்சியானது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், அந்தக்காட்சி 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சியாக எடுக்கப்பட்டு இருந்ததுதான்.
இந்த நிலையில், அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அவர் பேசும் போது, ‘எந்த ஒரு ஃபிலிம் மேக்கருக்கும் சிங்கிள் ஷாட்டாக ஒரு காட்சியை எடுப்பது என்றால், அதில் அவருக்கு ஒருவிதமான சந்தோஷம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால் அதில் எல்லோருமே மிகவும் ஒற்றுமையாக நின்று வேலை பார்க்க வேண்டும். அதனுடைய ரிசல்ட்டும் பார்ப்பதற்கு வேறுமாதிரியான ஃபீலை கொடுக்கும்.