Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்
Suchitra Audio Clip Issue: “சோசியல் மீடியாவில் இருக்கும் மக்கள் மற்றும் காவல்துறைக்கு, அந்த ஆடியோவில் இருப்பது யார் குரல் என்று தெரியும். காவல்துறையினர் அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஊடகங்கள் அமைதியாக இருப்பது போல தெரிகிறது.” - கார்த்திக்குமார்

Suchitra Audio Clip Issue: பட்டியலின சமூகம் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமாரின் ஆடியோ ஒன்று வைரல் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக கார்த்திக்குமார் பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து பதிவிட்டு இருக்கும் கார்த்திக் குமார், “கடந்த 3 நாட்களாக நான் கேட்டு வரும் செய்திகள் எனக்கு பெரு நிம்மதியை அளித்து வருகின்றன. பெரும்பான்மையான மீடியாக்கள், சோசியல் மீடியாவில் இருக்கும் மக்கள் மற்றும் காவல்துறைக்கு, அந்த ஆடியோவில் இருப்பது யார் குரல் என்று தெரியும்.
காவல்துறையினர் அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஊடகங்கள் அமைதியாக இருப்பது போல தெரிகிறது. ஆனால் அதை பற்றி தெரிந்தவர்கள் மேலும் தெரியப்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.