Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்

Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்

Kalyani Pandiyan S HT Tamil
Published May 22, 2024 04:23 PM IST

Suchitra Audio Clip Issue: “சோசியல் மீடியாவில் இருக்கும் மக்கள் மற்றும் காவல்துறைக்கு, அந்த ஆடியோவில் இருப்பது யார் குரல் என்று தெரியும். காவல்துறையினர் அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஊடகங்கள் அமைதியாக இருப்பது போல தெரிகிறது.” - கார்த்திக்குமார்

Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்
Suchitra Audio Clip Issue: ‘3 நாளா பெரு நிம்மதி.. பட்டியலின சமூக ஆபாச ஆடியோவுக்கு ஆதாரம்..’ - கார்த்திக்குமார்

இது குறித்து பதிவிட்டு இருக்கும் கார்த்திக் குமார், “கடந்த 3 நாட்களாக நான் கேட்டு வரும் செய்திகள் எனக்கு பெரு நிம்மதியை அளித்து வருகின்றன. பெரும்பான்மையான மீடியாக்கள், சோசியல் மீடியாவில் இருக்கும் மக்கள் மற்றும் காவல்துறைக்கு, அந்த ஆடியோவில் இருப்பது யார் குரல் என்று தெரியும்.

காவல்துறையினர் அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஊடகங்கள் அமைதியாக இருப்பது போல தெரிகிறது. ஆனால் அதை பற்றி தெரிந்தவர்கள் மேலும் தெரியப்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

என்ன பிரச்சினை:

முன்னதாக, பிரபல பாடகியான சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் குறித்து சில கருத்துக்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். குறிப்பாக, அந்த பேட்டியில் அவர் கார்த்தி ஒரு ஓரினச்சேரிக்கையாளர் என்று பேசி இருந்தார்.இந்த பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கு ரிப்ளை கொடுக்கும் விதமாக சுசித்ராவிடம், கார்த்திக் பேசியதாக சொல்லி ஆடியோ ஒன்று வைரல் ஆனது.

அதிர்ச்சி தரும் ஆடியோ:

அந்த ஆடியோவில், கார்த்திக் "நீ மிகவும் அசிங்கமாக பேசுகிறாய், இது படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுவது போல நீ பேசுகிறாய். நீ ஏன் இப்படி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லையே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானே. நீ நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்துல இருந்துதானே வந்த” என்று பேசியது போல இருந்தது.

இந்த ஆடியோ வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் “ நான் அப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

‘மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’

அதில் அது தன்னுடைய குரல் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு, தன்னிடம் சுசித்ரா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில் சுசித்ரா பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளதாவும், அதனை உறுதிபடுத்தாமல் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளதாகவும், ஆகையால் அதனை சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் கார்த்திக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரும் புகார் கொடுத்திருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: