Karthigai Deepam: ‘டக்குனு வந்த தீபா.. ஷாக்கிங்கில் ரம்யா.. நடக்கப்போவது என்ன?’: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட போலி சாமியாருடன் ரம்யா பேசிக்கொண்டிருக்கையில், டக்குனு வந்த தீபாவால், ஷாக்கிங்கில் ரம்யா உறைந்துபோகிறார். இந்நிலையில் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா ஏற்பாடு செய்த போலி சாமியார் பரிகாரம் குறித்து சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
அதாவது, ’மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து நீ உஷாரா இரு தீபா, எனக்கு ஏதோ தப்பா படுது.. தாலி வேற இல்லாமல் இருக்க’ என்று சொல்லி போனை வைக்கிறாள். அதன் பிறகு ரம்யா வீட்டிற்கு வர அவரது அப்பா, அபிராமி குறித்து நலம் விசாரிப்பதோடு ’அவங்களுக்கு நீ துணையாக இருக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக’ இருப்பதாகவும் சொல்கிறார்.
அடுத்து ரம்யா போலி சாமியார் சேகரை வர வைத்து, ’அந்த தீபாவை எப்படியாவது பரிகாரம் பண்ண வைக்கணும், நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொல்லுவேன். ஆனால், நீ பேசுற பேச்சு தீபாவை நான் பண்றேன்னு சம்மதம் சொல்ற வைக்குற மாதிரி இருக்கனும்’ என்று சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து, தீபா காலிங் பெல் அடிக்க ரம்யா அதிர்ச்சியாக சேகர் ஒளிந்து கொள்கிறான்.
இதைத்தொடர்ந்து போட்டோகிராபர் சுரேஷ், கார்த்திக்கு போன் செய்து, ரியா தன்னை போன் செய்து மிரட்டுவதாகச் சொல்லி, அந்த புட்டேஜ் தன்னிடம் இருக்கும் விஷயத்தையும் சொல்ல, கார்த்திக் ’நான் வந்து வாங்கிக்கறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டு, சுரேஷை பார்க்க கிளம்பி வருகிறான்.
அதேபோல் ஐஸ்வர்யா மற்றும் ரியா என இருவரும் முகத்தை மறைத்தபடி அங்கு வந்திருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நேற்றைய எபிசோட்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவும், தீபாவும் சாமியாரை பார்க்க வந்திருந்தனர். அப்போது, சாமியார், ‘’ உங்க பிரச்னை சரியாகணும்னா, தண்ணீரில் மிதக்கும் பரிகாரம் ஒன்று இருக்கிறது’’ என்று சொல்ல, தீபா ’’தனக்கு நீச்சலும் தெரியாது, தண்ணீரில் மிதக்கவும் தெரியாது’’ என்கிறாள். ரம்யாவும், ’’என்ன நீங்க இவ்வளவு கஷ்டமானதை பரிகாரம்னு சொல்றீங்க’’ என்று கேட்கிறாள்.
இதனையடுத்து பேசிய சாமியார், ’’பீப்பாயில் உட்கார வைத்து, தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து, சூரிய அஸ்தமனம் வரைக்கும், நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம். இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும்’’ என்று சொல்லி பயம் காட்டுகிறார். அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு முடியாமல் படுத்து இருக்க, அருணாச்சலம் அவளை கூப்பிடுகிறார். ஆனால், ஐஸ்வர்யா அப்படியே படுத்து இருக்க, அவரும் ரூமுக்குள் வந்து ’’நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, நீ ஹாயா தூங்கிட்டு இருக்க’’ என்று கோபப்படுகிறார்.
ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் '’இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல’’ என்று மனம் இறங்குகிறார். தொடர்ந்து, ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க, அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு, ’’நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துகிறேன்’’ என்று சொல்கிறார். ஐஸ்வர்யா பணம் என்றதும் ’’நானே எடுத்துகிறேன்’’ என்று சாவியை வாங்கி போய், பீரோவை திறக்கிறாள்.
அப்போது, பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். இதனையடுத்து, தனது அம்மாவுக்கு இதனை வீடியோ கால் செய்து காட்ட, அவள் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்கிறாள்.
பிறகு ஐஸ்வர்யா பணத்தை அருணாச்சலத்திடம் கொண்டு போய் கொடுக்க, அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு, சாவியை மறந்து செல்ல, ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள், இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்