Karthigai Deepam Serial: தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial: தீபா கழுத்திAல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்

Karthigai Deepam Serial: தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்

Aarthi Balaji HT Tamil
Published Jul 25, 2024 01:01 PM IST

Karthigai Deepam Serial: தர்மலிங்கம் எதுக்கு இதெல்லாம், தீபா இப்படியே இருக்கட்டும் என்று பேச ஐஸ்வர்யா ஏன் பணம் இல்லனு வேண்டாம்னு சொல்றீங்களா என்று கேள்வி கேட்கிறாள், அபிராமி எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள்.

தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்
தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய ( ஜூலை 24 ) எபிசோடில் மைதிலி ரம்யா தான் தாலியை எடுத்து இருக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று ( ஜூலை 25 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கல்யாணம் நடந்த மாதிரியே

அதாவது ரம்யா ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு, தீபாவுக்கு அவளுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். பிறகு அபிராமி, தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள் .

செலவை பார்த்து கொள்ளும் அபிராமி

இதை தொடர்ந்து தர்மலிங்கம் எதுக்கு இதெல்லாம், தீபா இப்படியே இருக்கட்டும் என்று பேச ஐஸ்வர்யா ஏன் பணம் இல்லனு வேண்டாம்னு சொல்றீங்களா என்று கேள்வி கேட்கிறாள், அபிராமி எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு தர்மலிங்கம் மீண்டும் ஜோசியரை வந்து பார்க்க அவர் தீபா செய்தது யார் செய்யாத ஒன்னு, அவ தாலியை கழட்டியதால் தான் அபிராமி உயிர் தப்பித்தது. அப்படி இருக்கும் போது திரும்பவும் தாலி ஏறினா அவங்க உயிர் போய்டும் என்று சொல்ல வீட்டிற்கு வந்த தர்மலிங்கமும் ஜானகியும் கார்த்தியிடம் விஷயத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்

இவர்கள் பேசுவதை கேட்ட அபிராமி கார்த்திக் கிட்ட எதுக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறீங்க? பயப்படும் மாதிரி எதுவும் நடக்காது, நல்லது தானே செய்ய போறோம் என்று பேசி கார்த்திக்கிடம் சென்று இந்த கல்யாணத்தில் நிறைய தடைகள் வரும்னு எனக்கு தோணுது. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீ நடத்தி கொடுப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு என்று சத்தியம் வாங்குகிறாள்.

அடுத்து நடக்க போவது என்ன

அடுத்து தீபா கார்த்திக் கொண்டு வந்த பேக்கில் சாமியார் கெட்டப் விக், தாடி ஆகியவை இருப்பதை பார்த்து கையில் எடுக்க அதை எல்லாரும் பார்த்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.