Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!

Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!

Divya Sekar HT Tamil Published Jan 24, 2025 11:51 AM IST
Divya Sekar HT Tamil
Published Jan 24, 2025 11:51 AM IST

karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம், அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.

Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!
Karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம்.. அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா - கார்த்திகை தீபம்!

அதாவது, போட்டோவை வாங்க செல்வதற்கு முன்பாக இன்விடேஷனை தேர்வு செய்ய செல்கின்றனர், ரேவதிக்கு எந்த டிசைன் தேர்வு செய்வது என்ற குழப்பம் உருவாக கார்த்தியை தேர்வு செய்ய சொல்கிறாள். கார்த்தி ஒரு டிசைனை தேர்வு செய்து கொடுக்கிறான்.

கார்த்திக் ஷாக்

அடுத்ததாக நிச்சயதார்த்த போட்டோவை வாங்க செல்கின்றனர், அப்போது அந்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் ஷாக் ஆகிறான், டாக்டரின் மகள் சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான்.

அடுத்து ரேவதி போட்டோவுடன் நேராக மகேஷ் வீட்டிற்கு செல்கிறாள், அப்போது மாயா நிச்சயதார்த்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ரேவதி கிளம்பியதும் மகேஷிடம் கார்த்தி மட்டும் அந்த போட்டோவை பார்த்தா நான் மாட்டிக்கொள்வேன் என்று சொல்கிறாள்.

இங்கே ரேவதி வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரியிடம் நிச்சயதார்த்த போட்டோவை காட்டுகிறாள். இந்த சமயத்தில் மாயா வீட்டிற்கு வருகிறாள். சாமுண்டேஸ்வரி என்ன மாயா திடீரென வந்து இருக்கீங்க என்று கேட்க ஸ்வீட் செய்தேன், உங்களுக்கும் கொண்டு வந்தேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைகிறாள்.

தீயில் போட்டோவை வீசி விட்டு நிம்மதி

பிறகு ரேவதியிடம் அந்த நிச்சயதார்த்த போட்டோவை கொஞ்சம் கொடுமா பார்த்துட்டு தரேன் என்று சொல்கிறாள். ரேவதியிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டு அவளை திசை திருப்பி தனது போட்டோக்களை மட்டும் எடுத்து மறைத்து விடுகிறாள். வெளியே வந்த அவள் எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டோவை வீசி விட்டு நிம்மதியுடன் செல்கிறாள்.

அதை தொடர்ந்து பாதி எறிந்த போட்டோ காற்றில் பறந்து வந்து கார்த்தியின் கால் அருகே விழ அதை எடுத்து பார்த்த கார்த்திக் இது அந்த போட்டோ தானே என்று சந்தேகம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.