Karthigai Deepam: உப்பின் மீது முட்டி போட வைத்து சித்ரவதை.. வறுத்தெடுக்கும் தீபா.. வதங்கி தவிக்கும் ரியா!
Karthigai Deepam: மூன்றாவது பரிகாரமாக உப்பை போட்டுவிட்டு அதன் மீது முட்டி போட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல, ரியா முடியாது என்று மறுக்கிறாள். உடனே, தீபா நீ பண்றியா இல்ல… மீனாட்சி அக்காவை வர சொல்லவா என்று கேட்டு, பரிகாரத்தை பண்ண வைக்கிறாள்.
ரியாவை திணற தீபா.. கார்த்திக்கு வில்லியாக போகும் லேடி ஹிட்லர் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா பிளான் போட்டு, ரியாவை சிக்க வைத்து, பரிகாரம் என்ற பெயரில் அங்கப்பிரஷனம் செய்ய வைத்து, போதாகுறைக்கு அக்னி குண்டத்தை வேறு கையில் கொடுத்து அலறவிட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மூன்றாவது பரிகாரமாக உப்பை போட்டுவிட்டு அதன் மீது முட்டி போட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல, ரியா முடியாது என்று மறுக்கிறாள். உடனே, தீபா நீ பண்றியா இல்ல… மீனாட்சி அக்காவை வர சொல்லவா என்று கேட்டு, பரிகாரத்தை பண்ண வைக்கிறாள்.
அதன் பின்னர், ஐஸ்வர்யா, ஆனந்த் மற்றும் ரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து, கார்த்திக்கை இதே கம்பெனியில் வச்சிருந்து வேலை வாங்க முடியாது என்று பேசுகின்றனர். அப்போது, இங்கு அவனுக்கு முதலாளி என்பதால் ராஜமரியாதை தான் கிடைக்கும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா.
ஆனந்த் அப்படின்னா என்ன செய்வது என்று யோசிக்க, ரியா வேற ஒரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். மேலும், எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனி இருக்கு. அந்த கம்பெனியோட சிஇஓ என் ஃப்ரண்டு ரம்யாதான். அவ ஒரு லேடி ஹிட்லர்; அவகிட்ட கார்த்திக் மாட்டுனா, ரொம்ப கஷ்டப்படுவான் என்று சொல்ல, ஆனந்த் சூப்பர் ஐடியா என பாராட்டுகிறான்.
அடுத்து அப்படியே ஃப்ளாஷ் கட் ஓப்பனாக… அதில் ரம்யா கம்பெனிக்கு காரில் வந்து ஹாரன் அடித்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால், செக்யூரிட்டி கதவைத் திறக்காமல் இருக்கிறார். போனில் பேசிக்கொண்டிருந்த அவனுக்கு ரம்யா வந்தது தெரியவர, நான் இந்த டைமுக்கு வருவேன்னு தெரிஞ்சும்… ஏன் கேட்ல இல்ல என்று கேள்வி கேட்க, குடும்ப பிரச்சினை காரணமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததாக அவன் சொல்கிறான். உடனே அவனை டிஸ்மிஸ் செய்கிறாள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
வீட்டிற்கு வரும் ஜோசியர், ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் செய்யணும் என்று சொல்லிச் செல்கிறாள். ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும், தீபா அபிராமியிடம், அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொன்னாள்.
அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னாள். ஆனால் அவளோ, என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொன்னாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு, உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுக்கிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொன்னாள்.
இதைக்கேட்ட ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க, வேறு வழியின்றி ரியா ஒப்புக்கொண்டாள். அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத..ஆனந்த் கோயிலுக்கு வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுத்தாள்.
அடுத்து தீபா கார்த்திக்கு சாப்பாடு கொண்டு வர, சிம்பிளாக வந்த அவளை பார்த்து செக்யூரிட்டி கார்த்திக் மனைவின்னு நம்ப முடியாமல், உள்ளே விட மறுத்தான். இதை பார்த்து அருண் தீபாவை உள்ளே அழைத்துச் சென்றான். கார்த்திக் எல்லோருக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்து, அவளை பாட்டு பாடவும் வைத்தான்.
இந்தப்பக்கம் கோயிலுக்கு வந்த ரியா, கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா, ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுத்தாள்.
இதனால் ரியா சிக்கி கொள்ள, அவளை அங்கபிரதர்சனம் செய்ய வைத்து, கையில் தீ சட்டியை கொடுக்க, ரியா சூடு தாங்காமல் தவித்தாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்