Karthigai Deepam: ஜோடியான அபிராமி - தீபா!- கடுப்பில் ரியா; காய வைத்து துவைக்கும் கார்த்திக் -கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ஜோடியான அபிராமி - தீபா!- கடுப்பில் ரியா; காய வைத்து துவைக்கும் கார்த்திக் -கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ஜோடியான அபிராமி - தீபா!- கடுப்பில் ரியா; காய வைத்து துவைக்கும் கார்த்திக் -கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Updated Apr 22, 2024 01:02 PM IST

மற்றொரு பக்கம் தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய, ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்வி கேட்கிறான்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா மதுவை சந்தித்து பேச, அதை மீனாட்சி, மைதிலி பார்த்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம். 

மதுவிற்கு வலிப்பு வந்து கீழே விழுந்த நிலையில், ரியா அவர் எனக்கு யார் என்று தெரியாது என்று நழுவிக் கொண்டாள்.  இதனையடுத்து மீனாட்சி, மைதிலி ஆகியோர் மதுவை மருத்துவமனையில் அட்மிட் செய்து, அவரிடம் பேச்சுக் கொடுக்க, ரியா குறித்த விஷயங்கள் தெரிய வருகிறது.

மறுபக்கம், ரியா வீட்டுக்கு வர, அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து சமையல்  செய்து கொண்டிருக்கின்றனர். இதை பார்த்தாயா…?  அபிராமி மனதில் இடம் பிடிக்க, நாம் ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா, இந்த தீபா கூடவே இருக்கா என கடுப்பாகிறாள். 

மற்றொரு பக்கம் தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய, ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்வி கேட்கிறான். 

இதற்கு கார்த்திக், காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல… அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என ஓவர் டைம் வேலை பாக்குறாங்க. அதனால உனக்கு என்ன பிரச்சினை என்று பதிலடி கொடுக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

மேனேஜர் இங்க சாப்பாடு இப்படித்தான் இருக்கும்… ஏன் எதுக்குன்னு கேட்கக்கூடாது, நாங்க போடுறதை தான் சாப்பிடணும் என்று திமிராக பேச, ஓனரை கூப்பிடுங்க என்று சத்தம் போட்டான் கார்த்திக்.

இதையடுத்து ஆனந்த் அங்கு வந்து, உனக்கு என்னடா பிரச்சினை என்று கேட்க, சாப்பாடு சரியில்லை என்று சொல்லி, அந்த சாப்பாட்டை அவனை சாப்பிட வைத்தான். தொடர்ந்து உடனடியாக காண்ட்ராக்டர மாத்துங்க என்றும் வலியுறுத்தினான். 

இதற்கிடையே, ரியா மதுவை சந்தித்து பேச, அதை மீனாட்சியும், மைதிலியும் பார்த்து விட்டனர். அதைத்தொடர்ந்து மதுவுக்கு வலிப்பு வந்து, கீழே விழ, ரியா அவர் யாருன்னு எனக்கு தெரியாது என்று அங்கிருந்து நழுவி விட்டாள். 

பிறகு மீனாட்சி மற்றும் மைதிலி மதுவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து, உங்களுக்கும் ரியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரிக்க, ரியா பற்றிய உண்மைகளை உடைத்தான் மது!

அடுத்ததாக, ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து இந்த சபதத்தில் கார்த்தியை எப்படியாவது தோற்க வைக்கணும்; அவன் தோத்துட்டா உன்னுடைய பிரச்சினை, என்னுடைய பிரச்சனையே எல்லாமே சரியாகிவிடும் என்று பேசிக் கொண்டனர். 

மறுபக்கம் தீபாவும், அபிராமியும் சேர்ந்து கார்த்திக்காக சமைத்தனர். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்தான முழு விபரமும் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.