காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்

காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 30, 2024 02:18 PM IST

காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்
காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்தியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வந்த சாமுண்டீஸ்வரி 

அதாவது, சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரின் குழந்தை குறித்து நலம் விசாரிப்பதற்காக கார்த்தியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள். மறுபக்கம் மாயாவும் அபார்ஷன் செய்ததற்கான ரிப்போர்ட்டுகளை வாங்குவதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறாள்.

காயத்திற்கு மருந்து

ஹாஸ்பிடல் டாக்டர் மல்லிகா குழந்தைக்கு காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் மாயா உள்ளே வர, குழந்தை மாயாவை பார்க்க, மாயா குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். குழந்தை காட்டி கொடுத்து விடுமோ என பயப்பட, மாயாவை மறந்து விட்ட குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க இவள் நிம்மதியாகிறாள்.

அதிர்ச்சியாகி ஓடி ஒளிந்து கொள்கிறாள்

அதைத்தொடர்ந்து மாயா அங்கிருந்து வெளியே வர, சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். இவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி ஓடி ஒளிந்து கொள்கிறாள் மாயா. இந்த சமயத்தில் நர்ஸ் ரிப்போர்ட்டுகளை கொண்டு வந்து மாயா மாயா என பெயர் சொல்லி கூப்பிடுகின்றனர்.

பெயரை மாற்றி ரிப்போர்ட்டுகளை வாங்கிய மாயா 

ஒரு கட்டத்தில் மாயா வெளியே வந்து என் பேரு சந்தியா பெயரை மாத்தி சொல்றீங்க என்று சொல்லி, ரிப்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டே, நைசாக கிளம்ப, கார்த்திக் மாயாவை பார்த்து விடுகிறான். தொடர்ந்து, அந்த புடவை குறித்து விசாரிக்க அந்த புடவை மண்டபத்தில் இருந்தது; நான் தான் மேனேஜரிடம் எடுத்துக் கொடுத்தேன் என பொய் சொல்கிறாள். கார்த்திக் மேனேஜருக்கு போன் போட்டு விசாரிக்க, அவரும் ஆமா மாயா தான் அந்த புடவையை கொண்டு வந்து கொடுத்தாங்க என சொல்கிறான்.

பெண்களுக்காக, பெண்கள் கட்டும் கோயில் 

அதைத் தொடர்ந்து வீட்டில் கார்த்திகை எப்படியாவது இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க, ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். பிறகு சாமுண்டீஸ்வரி தலைமையில் பெண்களுக்காக, பெண்கள் அனைவரும் சேர்ந்து கோயில் கட்டுகின்றனர். அதற்கான கும்பாபிஷேக செலவை சாமுண்டீஸ்வரி ஏற்றுக் கொள்வதாக சொல்கிறாள்.

கலசத்தை திருடி பழியை தீர்க்கத் திட்டம் 

பிறகு கலசத்தை சாமுண்டீஸ்வரி வீட்டில் வைத்து பூஜை செய்து கொடுக்குமாறு மற்ற பெண்கள் சொல்கின்றனர். இதை சாதகமாக்கி கலசத்தை திருடி பழியை கார்த்திக் மீது போட சந்திரா கலா திட்டமிடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.