கார்த்திகை தீபம் சீரியல் மே 9 எபிசோட்: பவரை காட்டிய கார்த்தி.. சிவனாண்டிக்கு வந்த வார்னிங்
எனக்கு ரத்தம் கொடுத்தவங்களை நான் பார்க்கணும் என்று சத்தம் போட, மயில்வாகனம் ராஜாவுக்கு தான் அவங்களை தெரியும் என்று சொல்கிறான், அடுத்த நாள் கார்த்தி ரோஹிணியை கோயிலுக்கு அழைத்து வர, ரத்தம் கொடுத்து காப்பாற்றியது பாட்டி பரமேஸ்வரி தான் என்று அறிந்து கொள்கிறாள்.

பவரை காட்டிய கார்த்தி.. சிவனாண்டிக்கு வந்த வார்னிங், திருவிழாவில் காத்திருந்த அதிரடி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
யாக பூஜைக்கு வந்த ராஜராஜன்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சரியான நேரத்தில் யாக பூஜைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்தி மற்றும் ராஜராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து யாகபூஜையில் கலந்து கொள்கின்றனர். மீண்டும் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் துரை இந்த ஊர்ல நான் தான் ராஜா.. நான் சொல்ற மாதிரி இங்க எல்லாம் நடக்கணும். இல்லனா தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டுகிறான்.
திட்டித்தீர்த்த ஐ.ஜி
இந்த சமயத்தில் அங்கு வந்த ஐ.ஜி என்னயா பண்ணிட்டு இருக்க என்று திட்டி வார்னிங் கொடுத்து துரத்தி விடுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் துரை சிவனாண்டியை சந்தித்து எனக்கு என்னமோ அந்த ராஜா சாதாரண ட்ரைவர் மாதிரி தெரியல என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கிறான்.
சமாதானம் செய்கிறான்.
அடுத்து யாக பூஜை நல்லபடியாக நடந்து முடிந்ததும் வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி, உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தப்போ அந்த ராஜசேதுபதி வந்து நிற்கல என்று சத்தம் போட, ராஜராஜன் அவளை சமாதானம் செய்கிறான்.
அதனை தொடர்ந்து ரோகினி நீங்க செய்யுறது எல்லாம் சரியே இல்ல.. எனக்கு ரத்தம் கொடுத்தவங்களை நான் பார்க்கணும் என்று சத்தம் போட, மயில்வாகனம் ராஜாவுக்கு தான் அவங்களை தெரியும் என்று சொல்கிறான், அடுத்த நாள் கார்த்தி ரோஹிணியை கோயிலுக்கு அழைத்து வர, ரத்தம் கொடுத்து காப்பாற்றியது பாட்டி பரமேஸ்வரி தான் என்று அறிந்து கொள்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

டாபிக்ஸ்