கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: பரமேஸ்வரி பாட்டியின் பேரன் யாக பூஜையில் அமர கூடாது என்பதற்காக தன் மருமகன் ராஜாவை பூஜையில் அமர வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி.

கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சரியான நேரத்தில் யாக பூஜைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
யாக பூஜையில் குளறுபடி
முன்னதாக கோயிலில் யாக பூஜா நடக்கும் இடத்திற்கு ராஜராஜன் வராததால், யார் பூஜையை செய்வது என்ற கேள்வி அங்கே எழ ஆரம்பித்தது. இதையடுத்து அங்கு பூஜையை நடக்க விடாமல் செய்ய எல்லா பக்கத்தில் இருந்து பிரச்சனை வர பரமேஸ்வரி பாட்டி தன் பேரனை பூஜையில் உட்கார வைக்க திட்டம் போட்டு சாமுண்டேஸ்வரியை கோபப்படுத்தினாள்.