கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 12:26 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: பரமேஸ்வரி பாட்டியின் பேரன் யாக பூஜையில் அமர கூடாது என்பதற்காக தன் மருமகன் ராஜாவை பூஜையில் அமர வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி.

கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் மே 8 எபிசோட்: சிவனாண்டிக்கு வந்த வார்னிங்.. உண்மை அறியும் ரோஹினி.. கார்த்திகை தீபம் சீரியல்

யாக பூஜையில் குளறுபடி

முன்னதாக கோயிலில் யாக பூஜா நடக்கும் இடத்திற்கு ராஜராஜன் வராததால், யார் பூஜையை செய்வது என்ற கேள்வி அங்கே எழ ஆரம்பித்தது. இதையடுத்து அங்கு பூஜையை நடக்க விடாமல் செய்ய எல்லா பக்கத்தில் இருந்து பிரச்சனை வர பரமேஸ்வரி பாட்டி தன் பேரனை பூஜையில் உட்கார வைக்க திட்டம் போட்டு சாமுண்டேஸ்வரியை கோபப்படுத்தினாள்.

அந்த சமயத்தில் வந்த சாமியார், ராஜராஜன் இல்லையென்றால் அவரது வழியில் மகன் முறை உள்ளவர்களும் இந்த பூஜையை செய்யலாம் என சொல்ல சாமுண்டீஸ்வரி தன் மருமகன் ராஜாவை பூஜையில் அமர வைத்தாள்.

மிரட்டும் இன்ஸ்பெக்டர்

அதாவது, கார்த்தி மற்றும் ராஜராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து யாக பூஜையில் கலந்து கொள்கின்றனர். மீண்டும் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் துரை இந்த ஊர்ல நான் தான் ராஜா.. நான் சொல்ற மாதிரி இங்க எல்லாம் நடக்கணும். இல்லனா தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டுகிறான்.

வார்னிங் கொடுத்த போலீஸ்

இந்த சமயத்தில் அங்கு வந்த ஐ.ஜி என்னயா பண்ணிட்டு இருக்க என்று திட்டி வார்னிங் கொடுத்து துரத்தி விடுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் துரை சிவனாண்டியை சந்தித்து எனக்கு என்னமோ அந்த ராஜா சாதாரண ட்ரைவர் மாதிரி தெரியல என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கிறான்.

ராஜராஜன் சமாதானம்

அடுத்து யாக பூஜை நல்லபடியாக நடந்து முடிந்ததும் வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தப்போ அந்த ராஜசேதுபதி வந்து நிற்கல என்று சத்தம் போட ராஜராஜன் அவளை சமாதானம் செய்கிறான்.

உண்மையை சொல்லும் ராஜா

அதனை தொடர்ந்து ரோகினி நீங்க செய்யுறது எல்லாம் சரியே இல்ல.. எனக்கு ரத்தம் கொடுத்தவங்களை நான் பார்க்கணும் என்று சத்தம் போட மயில்வாகனம் ராஜாவுக்கு தான் அவங்களை தெரியும் என்று சொல்கிறான், அடுத்த நாள் கார்த்தி ரோஹிணியை கோவிலுக்கு அழைத்து வர ரத்தம் கொடுத்து காப்பாற்றியது பாட்டி பரமேஸ்வரி தான் என்று அறிந்து கொள்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.