கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: கார்த்திக், ஜானகி மைதிலி ஆகியோர் பார்த்து விடுவார்க்ளா என்ற பில்டப் காட்சிகள் எகிற கடைசியில் முளைப்பாரி எடுப்பதற்கு நேரம் ஆவதால் கோயிலுக்கு சென்று விடுகின்றனர்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்
விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கோயில் திருவிழாவில் அன்னதானத்தில் விஷம் வைத்த வில்லன்களின் சதியை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி ஓரிடத்தில் உட்கார்ந்து சிலை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மைதிலி மற்றும் ஜானகி ஆகியோர் கோயிலுக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கும் ரேவதி வாங்க என் கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை காட்ட அழைத்துச் செல்கிறாள்.