கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: காப்பாற்றிய கார்த்தியிடம் சண்டை போடும் ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: ரேவதி, கார்த்திக் தன்னை நெருங்கி வருவது போல் கனவு கண்டு அலறி எழுந்து சத்தம் போடுகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: காப்பாற்றிய கார்த்தியிடம் சண்டை போடும் ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி ஹோட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பிட்ட பிறகு கையில் காசில்லாமல் சிக்கிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காப்பாற்றிய கார்த்திக்
அதாவது, ரேவதி கார்த்தியை கூட உதவிக்கு கூப்பிடாமல் என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறாள். ஹோட்டலில் அவளை பாத்திரம் கழுவ அழைத்து செல்ல தயாராகின்றனர். இந்த சூழலில் கடைசி நொடியில் கார்த்திக் அங்கு வந்து பணத்தை கொடுத்து ரேவதியை காப்பாற்றி ரூமுக்கு அழைத்து செல்ல ரேவதி அவனிடம் கோபப்பட்டு சண்டையிடுகிறாள்.