கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வரும் கார்த்தி- ரேவதி.. கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: திருமணம் முடிந்த கையோடு கார்த்திக்கும் ரேவதியும் பாட்டி வீட்டிற்கு விருந்திற்கு வருகின்றனர்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டிற்கு வந்து கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்து விட்டு சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பாட்டியின் விருப்பம்
அதாவது, மயில்வாகனம் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு பேச அப்போது பாட்டி என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு விருந்து வைக்கணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறார். மயில்வாகனம் அவ்வளவு தானே நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறான்.
சம்மதிக்கும் சாமுண்டீஸ்வரி
அடுத்து வீட்டிற்குள் வந்த அவன் ராஜராஜனிடம் ரகசியமாக விஷயத்தை சொல்ல இருவரும் ட்ராமா ஒன்றை போடா சாமுண்டீஸ்வரி நான் கார்த்தியையும் ரேவதியையும் அவங்க வீட்டிற்கு விருந்துக்கு அனுப்பி வைக்கிறேன். அவங்க பொறாமைப்பட்டு கஷ்டப்படட்டும் என்று சொல்கிறாள். ரேவதியும் விருந்துக்கு செல்ல சம்மதம் சொல்கிறாள்.
ஆசிர்வாதம் தரும் பாட்டி
இதை தொடர்ந்து கார்த்திக் ரேவதி பைக்கில் ஒன்றாக செல்ல கார்த்திக் ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான். மறுபக்கம் பாட்டி விருந்துக்கு தடபுடலாக ஏற்பாடு செய்து வைக்கிறார். கார்த்திக் தாத்தா பாட்டியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து மறைத்தும் வைத்து விடுகிறார்.
அடுத்து கார்த்திக் ரேவதி வீட்டிற்கு வர பாட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்கிறார். ரேவதியை வீட்டில் விளக்கேற்றிய பிறகு கார்த்தியுடன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்.
உளறிய பாட்டி
அப்போது ரேவதி பாட்டியிடம் நான் விரும்பிய கல்யாணமும் நடக்கல, நீங்க நினைச்ச கல்யாணமும் நடக்கல உங்களுக்கு வருத்தமா இல்லையா எனக் கேட்க, நீ என் பேரன தான கல்யாணம் பண்ணிருக்க என உளருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்,.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்