கார்த்தியின் மீது திரும்பிய சந்தேகம்.. கெடு வைத்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்தியின் மீது திரும்பிய சந்தேகம்.. கெடு வைத்த சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்தியின் மீது திரும்பிய சந்தேகம்.. கெடு வைத்த சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், காளி கோயிலுக்கு வந்த பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியை சந்தித்து ஏன் பையனை பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்..
அதாவது, பரமேஸ்வரி பாட்டி பையனை பார்க்கணும் என்று சொன்னதும், சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்கிறாள். உங்க பையனை நீங்க பார்த்து 28 வருஷம் ஆச்சு.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களால் உங்க பையனை பார்க்கவே முடியாது என்று மறுக்கிறாள்.
இதனால், பரமேஸ்வரி பாட்டி ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி காரில் வந்து கொண்டிருக்கும் போது, கார்த்திக் பாதி வழியில் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி நிற்கிறான். வெளியே வந்த சாமுண்டீஸ்வரி இப்போ எதுக்கு காரை நிறுத்தின? யாரை கேட்டு காரை நிறுத்தின என்று கோபப்படுகிறாள்.
அப்படி பேசி இருக்க கூடாது..
கார்த்திக் என்ன தான் இருந்தாலும் கோயிலில் அந்த பாட்டி கிட்ட நீங்க அப்படி பேசி இருக்க கூடாது.. அவங்க வயசுல எவ்வளவு பெரியவங்க என்று கேட்க, சாமுண்டேஸ்வரி இதையெல்லாம் கேட்க நீ யார் என்று சாடினாள்.
நான் உங்களை பலமுறை காப்பாற்றி இருக்கேன். அந்த உரிமையில் தான் கேட்கிறேன் என்று கூறினான். அதற்கு சாமு ண்டீஸ்வரி, எனக்கு ஆம்பளைங்க என்றாலே சுத்தமா பிடிக்காது. நீ என் பொண்ணுங்க கிட்ட நடந்த விதத்தை வச்சி தான் உன்னை என் வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டேன் என்றாள்.
தொடர்ந்து, இன்னும் 1 நிமிஷத்துல நீ காரை எடுக்கணும்.. இல்லனா நான் காரை ஸ்டார்ட் பண்ணி போயிட்டே இருப்பேன் என்று சொல்ல, கார்த்திக் குடும்பத்தை சேர்க்க வேண்டும் என்பதால் காரை எடுக்கிறான். தொடர்ந்து கோபமாக வீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடந்ததை சொல்ல, ராஜராஜன் அம்மா வந்தாங்களா என்று கேட்கிறார்.
ராஜராஜனிடம் சாடிய சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி நீங்க தான் வர சொன்னீங்களா என்று கேட்க, அவர் இல்லை என்று சொல்ல, ஈஸ்வரி மயில் வாகனம் மீது சந்தேகப்பட அவனும் இல்லை என்று சொல்கிறான். இந்த சமயத்தில் சந்திரகலா கார்த்திக் மீது சந்தேகத்தை கிளப்ப, கார்த்திக் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியின் மகள்களும் கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர்.
தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி உள்ளே சென்றதும், சந்திரகலா மைண்ட் வாய்ஸ் உடன் கார்த்திக்கை பார்க்க, அவன் உங்களுக்கு சந்தேகமா இருந்தா நேரடியாக என்கிட்ட கேளுங்க.. இல்ல போலீசில் கம்பளைண்ட் கொடுங்க என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்