திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!

திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 10, 2024 03:32 PM IST

சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!
சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டேஸ்வரியின் துணியை பற்ற வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சாமுண்டீஸ்வரி புடவையில் தீ

அதாவது, சாமுண்டீஸ்வரி பூஜையறைக்குள் இருக்க துணியை பற்ற வைத்த சகுந்தலா,.யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விடுகிறாள். ஏதோ கருகும் வாசனை வருவதை உணர்ந்த சாமுண்டீஸ்வரி ஒரு கட்டத்தில் தனது புடவை பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

சாமுண்டீஸ்வரி அலறி அடித்து சத்தம் போட சந்திரகலாவே ஓடி வந்து தீயை அணைத்து நல்லவள் வேஷம் போடுகிறாள். எனக்கு என்னமோ, கார்த்திக் தம்பி வந்ததுக்கு அப்புறம் தான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு என்று சந்தேகமா இருக்கு என்று சொல்லி சாமுண்டீஸ்வரி மனதுக்குள் சந்தேகத்தை கிளப்ப முயற்சி செய்கிறாள்.

அடுத்து சந்திரகலா ஜோசியர் ஒருவரை பார்த்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி எல்லாத்துக்கும் காரணம் கார்த்திக் தான் என்று சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள். வீட்டிற்கு வந்ததும், மீண்டும் நடந்த விஷயங்களை சொல்கிறாள். வீட்டில் உள்ள எல்லாரும் கூடி நிற்கின்றனர். கார்த்திக் சாமுண்டீஸ்வரி பின்னாடி நிற்கிறான்.

ஜோசியக்காரர் வைத்த சூனியம்

ஜோசியக்காரர் உங்களை சுத்தி வஞ்சகம் நிறைந்து இருக்கு.. ஆனால், உங்களுக்கு பின்னாடியே உங்க காவல் தெய்வம் இருக்கு.. அதை மட்டும் விட்டுடாதீங்க, அந்த காவல் தெய்வம் இருக்கும் வரை உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது என்று சொல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள்.

அதன் பிறகு ஜோசியர் எல்லாருடைய ஜாதகத்தையும் வாங்கி பார்க்கிறார். ரேவதியின் ஜாதகத்தை பார்த்து விட்டு இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சா பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார். ஜோசியர் சொன்னதை கேட்ட ரேவதி அப்செட்டாகி உள்ளே சென்று விட ஸ்வேதாவை அனுப்பி ரேவதியை அழைத்து வர சொல்கிறாள் சாமுண்டீஸ்வரி.

ரேவதியை சுவாதி வற்புறுத்தி அழைத்து வர ரேவதி டல்லாக இருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி என்னாச்சு என்று கேள்வி எழுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.