"சூர்யா பொறாமை" - ஓடிடியில் வெளியாகும் கார்த்தியின் மெய்யழகன்..எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்
கார்த்தியின் மெய்யழகன் படம் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி -அரவிந்த்சாமி ஆகியோருக்கு இடையிலான ப்ரோமோன்ஸ் ஆக இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கார்த்தி, அரவிந்த் சாமி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் மெய்யகன். உணர்வுப்பூர்வமான குடும்ப கதையாக இருந்த மெய்யழகன் படத்தை 96 படப்புகழ் பிரேம் குமார் இயக்கியிருந்தார்.
ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். சரண் சக்தி இளவயது அரவிந்த் சாமியாக நடித்திருப்பார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மெய்யழகன் ஓடிடி ரிலீஸ்
கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும், ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மெய்யழகன் படம் வரும் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.
தமிழில் வெளியான அதே நேரத்தில் மெய்யழகன் படம் தெலுங்கிலும் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் வெளியானது. தெலுங்கிலும் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
மெய்யழகன் கதை
சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்லும் அரவிந்த்சாமியின் குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து, சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார். அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தி உடன், அர்விந்த்சாமி பழக நேர்கிறது. கார்த்தியின் பெயர் கூட தெரியாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அவருடன் பழகும் அர்விந்த்சாமி, இறுதியில் தன்னை தெய்வமாக பாவிக்கும் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வில், அந்த இரவு முடிந்து விடியும் போது, சென்னை வந்துவிடுகிறார்.
அதன் பின் கார்த்தியின் பெயர் மெய்யழகன் என்பதை அறிந்து, டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு காட்சி
படத்தின் இடம்பிடித்திருந்த ஜல்லிக்கட்டு காட்சி ஒன்று டெலீடட் சீன் என படக்குழுவினர்கள் பகிர்ந்திருந்தார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது போல் அமைக்கப்பட்டிருந்த இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டிருந்த இந்த காட்சியை வைத்து இருந்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கார்த்தி புதிய படம்
கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
இதுதவிர நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் கார்த்தி நடித்துள்ளார். இதில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ஆனந்த ராஜ், ராஜ்கிரண், ஜி.எம். செளந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சூர்யா பொறாமை
முன்னதாக மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, கார்த்தியை பார்த்து பொறாமை அடைவதாக கூறினார். அவர் பேசும்போது, "திரைப்படங்களைப் பார்த்து, அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்காக அவற்றை கொண்டாடுங்கள். மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி அதிகம் கவலைப்படுவதையும் மற்றவர்களுடன் சண்டையிடுவதையும் தவிருங்கள். சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உங்களது கவலையாக இருக்ககூடாது.
மெய்யழகன் பட கதை எனக்கு வந்திருந்தால் மரியாதையுடன் நான் தயாரிக்கிறேன், கார்த்தி நடிக்கட்டும் என கூறினேன். இது பெருந்தன்மை இல்லை. என்னால் இந்த மாதிரி படம் நடித்திருக்கவே முடியாது. அவரது ப்ரோமேன்ஸ் பார்த்து பொறாமையாக இருந்தது" என்றார்.

டாபிக்ஸ்