துள்ளாத மனமும் துள்ளும் ஏற்படுத்தின தாக்கம்..யாரும் திட்டுவாங்கன்னு கிடைச்ச அட்வைஸ்.. மிஸ் யூ படவிழாவில் கார்த்தி பேச்சு
துள்ளாத மனமும் துள்ளும் ஏற்படுத்தின தாக்கம்..யாரும் திட்டுவாங்கன்னு கிடைச்ச அட்வைஸ்.. மிஸ் யூ படவிழாவில் கார்த்தி சித்தார்த் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

துள்ளாத மனமும் துள்ளும் ஏற்படுத்தின தாக்கம்..யாரும் திட்டுவாங்கன்னு கிடைச்ச அட்வைஸ்.. மிஸ் யூ படவிழாவில் கார்த்தி பேச்சு
நடிகர் சித்தார்த் நடிக்கும்‘மிஸ் யூ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, நடிகர் சித்தார்த் உடனான நட்பினை ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார்.
நடிகர் கார்த்தி மேடையில் பேசியதாவது, ‘’ மிஸ் யூ படக்குழுவினருக்கு வணக்கம். இங்கே உள்ளே வந்து உட்கார்ந்து இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும். எனக்கு உதவி இயக்குநராக இருந்த நினைவுகள் எல்லாம் வந்தது.
ஏனென்றால், சித்தார்த் ’ஆயுத எழுத்து’ முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாயின்ட் செய்தான். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் சூட் செய்துகொண்டு இருந்தோம். அவன் அங்கு இருக்கிற எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுத்திட்டு இருக்கான். பேக் கிரவுண்ட் செட் பண்ணிட்டு இருக்கான். மணி சார், பொறுக்கமுடியாம, அவனை நடிக்கமட்டும் சொல்லுங்கடான்னு சொல்றாரு.