‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Nov 12, 2024 09:33 PM IST

‘தம்பி வரார் வழிவிடு’ என்ற கேப்ஷனோடு நடிகர் கார்த்தியின் அடுத்தப்பட அப்டேட்டை, அந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்டியோ கீரின் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!
‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையை சந்தோஷ் நாராயணன் வழங்கியுள்ளார்.‌ கலை இயக்கத்தை டி.ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை, வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

 

யார் இந்த நடிகர் கார்த்தி?:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர், கார்த்தி. இவருக்கு தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கார்த்தி 1977, மே 25ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் சென்னையில் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்துவிட்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்கில் எம்.எஸ். படித்தார். அப்படியே திரைப்பட இயக்குநர் ஆவதற்குண்டான கோர்ஸையும் படித்தார். அமெரிக்காவில் இருக்கும்போது கார்த்தி, பகுதிநேர கிராஃபிக் டிசைனராகப் பணிபுரிந்தார்.

நடிகர் கார்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை:

இவர் ஈரோடு, கவுண்டம்பாளையத்தினைச் சார்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியை, 2011 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் வைத்து மணந்தார். இவர்களுக்கு என்ற உமையாள் என்ற மகளும் கந்தன் என்ற மகளும் உள்ளனர்.

சினிமாவில் கார்த்தியின் பங்கு:

நடிகர் கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் ’ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய ’பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மெகா ஹிட்டாகி, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் 365 நாட்கள் திரையரங்குகளில் ஓடி, கார்த்தியின் பெயரைப் பதிவுசெய்தது. அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன கார்த்தி, இப்படத்திற்காக மூன்று ஆண்டுகள் உழைத்தார். இப்படம் வெளியான புதிதில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த காலத்து தலைமுறையினரிடேயே ரீ- ரிலீஸின்போது கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,'சிறுத்தை’ , ‘ ‘மெட்ராஸ்’ , கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ’பொன்னியின் செல்வன்’உள்ளிட்டப் பல ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்தார். சமீபத்தில் இவரது 25ஆவது படமாக ’ஜப்பான்’ வெளியானது. பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும், படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டது. அதனை தொடர்ந்து மெய்யழன் திரைப்படம் வெளியானது. 96 படத்தை இயக்கிய பிரேம் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.