Karthi: இரவு முழுவதும் துங்க விடாமல் டார்சர் செய்த இயக்குநர் - நடிகர் கார்த்தி கதறல்!
Karthi: கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும் என்றார் கார்த்தி.

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை ( ஆகஸ்ட் 31 ) ஆம் தேதி மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
கோவை பிடித்த ஊர்
இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மெய்யழகன் திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல் ஹாசன் பாடியுள்ளார். கமல் ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “ கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும்.