Sai Pallavi: "காதலை கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க.." சாய் பல்லவியை வெட்கப்பட வைத்த கார்த்தி
Sai Pallavi: திரையிலேயே காதலை முழுசா கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க என்று சாய்பல்லவியை நடிகர் கார்த்தி பாராட்டினார். பின்னர் பேசிய சாய் பல்லவி, கார்த்தியிடம் புனிதத்தன்மை இருக்கிறது என்று கூறி அவரை வெட்கப்பட வைத்துள்ளார்.

நாக சைதன்யா - சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் தண்டல். தமிழிலும் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தி, சாய் பல்லவியை புகழ்ந்து பேசினார். இதேபோல் சாய் பல்லவியும் பேசுபோது கார்த்தியை வெட்கப்பட வைத்தார்.
காதலை கொட்டி கொடுக்கும் சாய்பல்லவி
சாய் பல்லவி குறித்து கார்த்தி கூறியதாவது, "சாய் பல்லவி, நீங்கள் ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீங்கள் உயிர் கொடுப்பது சிறப்பாக உள்ளது. ஒரு பையனை காதலிப்பது என்றால் கொட்டி தீர்த்திவிடுகிறீர்கள். இதனாலேயே பசங்க உங்க மேல பைத்தியக்கார தனமாக இருக்காங்க.
டான்ஸ் பத்தி சொல்லவே வேண்டாம். வலி, வயதுக்கு மீறிய அனுபவமா இருக்கலாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை கூட அமரன் பார்த்த பிறகு உங்களிடம் பேசினேன். மலர் டீச்சரா இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி அந்த படத்துக்கு நிறையா கொடுக்குறீங்க. இதை செய்வதற்கு நன்றி.
துருக்கி கிளப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்
துருக்கியில் ஒரு கிளப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடலான ஊ அண்டவா பாடலை ரீமிக்ஸ் செய்து ஒலித்தார்கள். இதுதான் அவரது புகழின் உச்சம். இவரது டப்பாவில் இன்னும் எத்தனை வருஷம் மியூசிக் வருமோ. நீங்கள் இந்த நாட்டுக்கே சொந்தமானவர். உங்கள் எனர்ஜியை விடாமல் இருப்பது சிறப்பு.
தண்டேல் ஒரு உண்மைக் கதை என்றும், அதில் நடித்தது உத்வேகம் அளிக்கும் விதமாக இருந்ததாக நாக சைதன்யா சொன்னார். அவரது முதல் படம் பார்த்தபோது ரொம்பவும் வெட்கப்பட்டவாறே இருந்தார். ஆனால் அதிலும் ஒரு வெகுளித்தனம் இருக்கும். இதனால் தான் அவர் பெண்களுக்கு பிடித்தவராக உள்ளார்.
தன்னை சுற்றி இருக்க எந்த விஷயமும் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறார். இந்த படத்துக்காக ஒன்னறை வருஷம் வரை உழைப்பை கொடுத்துள்ளீர்கள். எனவே அது வீண் போகாது. படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன். உண்மை கதை அனைவரும் தங்களுடன் பொருத்தி பார்க்கும் விஷயமாக இருக்கும்" என்று கூறினார்.
இதன் பின்னர் கார்த்தியை புகழ்ந்து நடிகை சாய் பல்லவி பேசும்போது, "கார்த்தியின் சமீபத்திய படமான மெய்யழகன் படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்த யாராக இருந்தாலும் ஒரு சின்ன மனமாற்றம் நிச்சயம் நிகழும்.
பொறுக்கி பாயாக வந்த கார்த்தி
பருத்திவீரன் படத்தில் ஒரு பக்காவான பொறுக்கி பாயாக நடித்திருந்த கார்த்தி மெய்யழகன் படத்தில் வெகுளியான நல்ல உள்ளம் கொண்ட மனிதராக அப்படியே இருப்பார். இயல்பாகவே அவருக்குள் புனிதத்தன்மை இருந்தால் மட்டும் தான் திரையில் அதை கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்.
தண்டேல் படம்
தெலுங்கு இயக்குநர் சந்தூ மோன்டேடி இயக்கத்தில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் தண்டேல் படம் பிபர்வரி 7ஆம் தேதி வெளியாகிறது. நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் இந்த படம் அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் போட்டியாக களமிறங்குகிறது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்