கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..

கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..

Malavica Natarajan HT Tamil
Published Jun 10, 2025 06:04 PM IST

கமலின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பான வழக்கின் விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..
கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..

தக் லைஃப் பட தடை

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (கே.எஃப்.சி.சி) கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட பல அமைப்புகள் கமல்ஹாசனை மன்னிப்புக்கேட்க கோரியது. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்புகேட்க மறுத்து, அரசியல் வாதிகள் மொழிப்பிரச்சினையில் தலையிட வேண்டாம். அன்பு ஒரு போது மன்னிப்புக் கேட்காது என்றார். அதனைதொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

கமல் மனு

இந்த நிலையில், தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி வழியாக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கும் கமல்ஹாசன், அந்த மனுவில் கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மன்னிப்பு கோரிய கோர்ட்

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசனை கடுமையாக கண்டித்தது. அவர் மன்னிப்பு கேட்டால் பிரச்சனை சரியாகிவிடும் எனக் கூறியும் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் படத்தின் ரிலீஸ் ஜூன் 10 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கும் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு

பின், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அதனை நீதிமன்றம் வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் படம் வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில், தக் லைஃப் பட விவகாரம் தொடர்பாக கர்நாடக சினிமாவினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை என்ன?

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) நடிகர் தனது சமீபத்திய அறிக்கைகளுக்கு பொது மன்னிப்பு கேட்காவிட்டால் திரைப்படத்தை புறக்கணிப்பதாக அறிவித்த பின்னர் கமல் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். சென்னையில் நடைபெற்ற ஒரு விளம்பர நிகழ்ச்சியில் அவர் அளித்த கருத்துகள் கன்னட ஆதரவாளர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது மற்றும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்திற்கு அனுமதி மறுப்பு

பிடிஐயிடம் பேசிய KFCC தலைவர் எம். நரசிம்மலு, சபையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். "கமல்ஹாசன் நீதிமன்றம் செல்லட்டும். நாங்கள் எந்த சட்டவிரோத செயலையும் செய்யவில்லை. ஆனால் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தின் திரையிடலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று நரசிம்மலு கூறினார்.

எதிர்ப்பும் ஆதரவும்

ஹாசனின் கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களுக்கு இடையேயான கலாச்சார ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறினர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கூட கமல்ஹாசனின் நோக்கத்தை ஆதரித்ததாகவும், அந்த அறிக்கை நட்புரமான உரையாடலின் போது அளிக்கப்பட்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இந்த சூழ்நிலையை சமாளிக்க கமல்ஹாசனை தொடர்பு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.