கர்ப்பகால வதந்திகளுக்கு பதிலளித்த கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், பிரபல நடிகர் சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைமூர் அலி கான், ஜஹாங்கிர் அலி கான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கரீனா தற்போது தனது கணவர் சைஃப் அலி கான் மற்றும் மகன்கள் தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோருடன் ஐரோப்பாற்கு விடுமுறை சென்று இருந்தார்.
விடுமுறையில் இருந்து அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் குழந்தை பம்ப் இருப்பதாக கூறி சிலர் கூறினர்.
இதனை மறுத்து நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில், “இது பாஸ்தா மற்றும் ஒயின் நண்பர்களே...அமைதியாக இருங்கள்...நான் கர்ப்பமாக இல்லை.. உஃப்....நமது நாட்டின் மக்கள் தொகைக்கு சைஃப் ஏற்கனவே அதிக பங்களிப்பை செய்திருப்பதாக…மகிழுங்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சைஃப் அலி கான் முன்பு அம்ரிதா சிங்கைத் திருமணம் செய்து கொண்டார. ஆனால் 2004 ஆம் ஆண்டு அவர் தனது 13 வருட உறவை முறித்துக் கொண்டார். அவர்களுக்கு் சாரா அலி கான் மற்றும்இப்ராஹிமை என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

டாபிக்ஸ்