Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்

Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Mar 26, 2025 07:44 PM IST

Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி கராத்தே மாஸ்டர் ஹுசைனிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊரான மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காஜிமார் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்
இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்

ஹுசைனி உடல் நல்லடக்கம்

உயிரிழந்த காரத்தே மாஸ்டரான ஷிகான் ஹுசைனி உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஹுசைனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏராளாமான கராத்தே, வில்வித்தை வீரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் ஹுசைனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் காஜிமார் பள்ளிவாசலுக்கு உறவினர்களால் சுமந்து செல்லப்பட்ட ஹுசைனி உடலானது, இஸ்லாமிய மத முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

புற்று நோய் பாதிப்பு

ரத்த புற்று நோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருந்தார. இதையடுத்து இன்னும் சில நாட்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்கப்போவதாக உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த வீடியோவில், தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும் என்ற நிலையில், மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் ஹுசைனி. மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாகவும் கூறிய அவர், மேலும் தனது நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தான் எதை பற்றியும் பயப்படவில்லை, தைரியமாக போராடுவதாக கூறியிருந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த வந்தார். தான் இறப்பதற்கு முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார்.

ஷிஹான் ஹுசைனி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவின் மூலம் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். தான் மறைந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார், தனது கராத்தே சங்கத்தின் நீண்டகால வழிகாட்டியாக இருந்ததாகவும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தன் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், தனது கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் தனது இதயத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், இது அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆழமான பிணைப்பைக் குறிக்கிறது. ஒரு வழிகாட்டி, பயிற்சியாளர் மற்றும் போராளியாக எனது மரபு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

ஹுசைனிக்கு நிதியுதவி

கராத்தே ஹுசைனியின் உடல் நிலை பற்றி அறிந்த திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள்.உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பாலசந்தரால் அறிமுகம்

கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார். கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயிற்சியாளராக இருந்து வரும் இவர் தற்காப்பு கலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். கடைசியாக விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

பவண் கல்யாணுக்கு ஆசிரியர்

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருந்து வரும் பவன் கல்யாண், ஹுசைனியின் மாணவராக இருந்துள்ளார். ஹுசைனி கராத்தே மட்டுமல்லாமல், வில்வித்தை, சமையல் கலை போன்ற துறைகளிலும் பிரபலமானவராக இருந்துள்ளார் ஹுசைனி.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தளபதி விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், இந்தத் துறைகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் ஆதரவை நாடுகிறேன். விளையாட்டு மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம் அவரது மாணவர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று கூறியிருந்தார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.