ஆற்றில் குளிக்கும் போது பறிபோன உயிர்.. ‘ஜூனியர் நடிகர் இறந்தது காந்தாரா படப்பிடிப்பில் அல்ல’ - படக்குழு விளக்கம்!
ரிஷப் ஷெட்டியின் படப்பிடிப்பின் போது ஜூனியர் நடிகர் ஒருவர் ஆற்றில் குளிக்குபோது நீரில் மூழ்கி இறந்ததாக வெளியான செய்திகளுக்கு ரிஷப் ஷெட்டி படத்தின் தயாரிப்பாளர்கள் பதில் அளித்துள்ளனர்.

ஆற்றில் குளிக்கும் போது பறிபோன உயிர்.. ‘ஜூனியர் நடிகர் இறந்தது காந்தாரா படப்பிடிப்பில் அல்ல’ - படக்குழு விளக்கம்!
ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது 33 வயதான எம்.எஃப் கபில் என்ற ஜூனியர் நடிகர் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவம் காந்தாரா 2 படப்பிடிப்பின் போது நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்திருக்கிறது.
தயாரிப்பாளர்கள்
இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் பகிர்ந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஜூனியர் கலைஞர் எம்.எஃப்.கபிலின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.