இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்..

இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 18, 2025 06:36 AM IST

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் தனது வரவிருக்கும் பான் இந்தியா படமான 45 குறித்து பல சுவாரசிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்..
இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்.. (X)

45 படம்

கன்னடத்தில் பிரபலமான ஹீரோக்களான சிவராஜ் குமார், உப்பேந்திரா, நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம்தான் 45. சூராஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் உமா ரமேஷ் ரெட்டி, எம்.ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்த இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவான 45 படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 45 படத்தின் டீஸர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது.

நீங்கள்தான் நீதி செய்ய முடியும்

அப்போது பேசிய நடிகர் சிவராஜ் குமார் “இயக்குனர் அர்ஜுன் ஜன்யா 45 படத்தின் கதையை எனக்கு நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் சொன்னார். அப்படித்தான் இந்த படத்திற்கு 45 என்ற தலைப்பை வைத்தோம். கதை சொன்ன பிறகு அர்ஜுன் ஜன்யா வேறு ஒரு இயக்குனருக்கு இயக்க பொறுப்பை கொடுப்பேன் என்று சொன்னார். இந்த கதையை நீங்கள்தான் நீதி செய்ய முடியும் என்று சொல்லி அர்ஜுனை நான் சம்மதிக்க வைத்தேன்” என்று சிவராஜ் குமார் தெரிவித்தார்.

கதைதான் படத்திற்கு ஹீரோ

“45 படத்தில் உப்பேந்திராவுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் திறமையானவர். சினிமாவையே உலகமாக நினைத்து வாழ்ந்து வருகிறார். உப்பேந்திராவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இன்று ராஜ் பி ஷெட்டி இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. 45 படத்தில் நான், உப்பேந்திரா, ராஜ் பி ஷெட்டி யாருடைய கதாபாத்திரமும் மேலோங்கவில்லை. கதைதான் இந்த படத்திற்கு ஹீரோ. கதைதான் முக்கியமாக வெற்றி பெறும்” என்று கன்னட சூப்பர் ஸ்டார் குறிப்பிட்டார்.

புற்றுநோயுடன் நடிப்பு

“இயக்குனர் அர்ஜுனுக்கு நல்ல பெயர் வரும். புதிய கதைக்களத்தை திரையில் பார்க்கலாம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவில் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. கீமோதெரபி எடுத்துக் கொண்டே ஷூட்டிங் செய்தேன். எனக்கு எங்கள் படக்குழு நிறைய விலக்குகள் கொடுத்தார்கள், நீங்கள் இதை செய்யக்கூடாது, அது செய்யக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் செய்ய முடிந்ததை செய்தேன். என்னால் ஏமாற்றம் அடைவது எனக்கு பிடிக்காது. அதனால் தான் என் கதாபாத்திரத்திற்கு இருந்த அனைத்து வகையான காட்சிகளையும் நடித்தேன்” என்று சிவராஜ் குமார் கூறினார்.

பெட்டி படத்தில் நடிக்கிறேன்

“ராம்சரண் அவர்களுடன் பெட்டி படத்தில் நடிக்கிறேன். சரண் அவர்களின் ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. ஜெயிலர் படத்தில் என் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்த் அவர்களுக்காகவே அந்த படத்தில் நடித்தேன். இப்போது ஜெயிலர் 2ல் கூட நடிக்கப் போகிறேன்” என்று சிவராஜ் குமார் தனது பேச்சை முடித்தார். இவரது பேச்சு கன்னட மற்றும் தென்னிந்திய ரசிகர்களிடையே பரவலாக பேசப்படுகிறது.