காந்தாரா பட நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காந்தாரா பட நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..

காந்தாரா பட நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..

Malavica Natarajan HT Tamil
Published May 12, 2025 03:59 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் ராகேஷ் பூஜாரி திடீர் மாரடைப்பால் காலமானார்.

காந்தாரா 2 நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா 2 படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..
காந்தாரா 2 நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா 2 படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..

ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் மரணம்

பி.டி.ஐ அறிக்கையின்படி, நடிகரின் குடும்ப வட்டாரங்கள் அவர் 'திடீர் மாரடைப்பால்' இறந்ததாகத் கூறியதாக தெரிகிறது. இவர் நேற்று (மே 11) ஞாயிற்றுக்கிழமை மாலை உடுப்பி அருகே நிட்டேவில் நடந்த திருமண மெஹந்தி விழாவில் பங்கேற்றதாக கூறியது. அப்போது, ராகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். ராகேஷ் திருமணத்திற்கு முந்தைய விழாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார்.

காந்தாரா 2 நடிகர்

தகவல்களின்படி, ராகேஷ் சமீபத்தில் காந்தாரா அத்தியாயம் 1 படப்பிடிப்பை முடித்தார். காந்தாராவின் முந்தைய கதையான இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்குகிறார். சில நாட்களுக்கு முன்பு, ஜூனியர் கலைஞர் ஒருவர் ஆற்றில் நீச்சல் அடிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடக்கவில்லை என்றும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

தூய்மையான மனிதர்

ராகேஷின் அகால மரணச் செய்தி கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ப்ருத்வி அம்பர் அவரது மரணச் செய்திக்கு பதிலளித்து தனது எக்ஸ் கணக்கில், “எப்போதும் தூய்மையான இனிமையான புன்னகையுடன் இருக்கும் மிகவும் திறமையான கலைஞர், நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள், மிகவும் வருத்தமாக இருக்கிறது, ராகேஷ் நாங்கள் உன்னை இழக்கிறோம்!” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

நீங்கள் கொடுத்த மகிழ்ச்சியை மிஸ் செய்கிறோம்

இதற்கிடையில், காமெடி கில்லாடிகளு நீதிபதி ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், "எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ராகேஷா... எனக்கு பிடித்த ராகேஷா. மிகவும் இனிமையான நம்ம ராகேஷா. உன்னை நான் மிஸ் செய்கிறேன்" என்று எழுதினார்.

அவர் மேலும், “ராகேஷுடன் இனி பேச முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை... காமெடி கில்லாடிகளு எனக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி, ராகேஷ் மற்றவர்களிடமிருந்து எப்போதும் தனித்து நின்றவர். அவர் எவ்வளவு அழகான மனிதர். என்ன ஒரு திறமை மற்றும் கேமராவுக்கு வெளியேயும் எனக்குத் தெரிந்த மிகச்சரியான நபர். ராகேஷா நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள், எல்லோரும் உங்களை மிஸ் செய்யப் போகிறார்கள்... உங்கள் புன்னகை உங்கள் குறும்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சிக்கு நன்றி ராகேஷா.” என்று கூறினார்.

ரக்ஷிதாவின் இன்ஸ்டா ஸ்டோரி
ரக்ஷிதாவின் இன்ஸ்டா ஸ்டோரி