ஆசை யார விட்டுச்சு.. கங்குவா கதாநாயகி வீட்டில் கைவரிசை காட்டிய கும்பல்.. மொத்தமும் கோவிந்தா தான்!
கங்குவா படத்தின் கதாநாயகி திஷா பதானி அப்பாவிடம் ஒரு கும்பல் 25 லட்சத்தை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாலிவுட் நடிகையான திஷா பதானி, நடிகர் சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் மூலம் அவர், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமானார். கங்குவா படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களே ஆன நிலையில், அப்படத்தின் கதாநாயகி திஷா பதானி வீட்டில் நடந்த மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
திஷா பதானி வீட்டில் நடந்த மோசடி
பாலிவுட் கதாநாயகியான திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் சிங் பதானி ஒரு ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர். இவரிடம் தான் ஒரு கும்பல் ஆசை காட்டி மோசம் செய்துள்ளது. காவல் அதிகாரியான இவர் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிவில் லைன் பகுதியில் வசித்து வருகிறார். இவர், துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சமயத்தில் அரசியல் பின்புலம் உள்ளதாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரிடம் பழக்கம் வைத்துள்ளார்.
பதவி ஆசையால் பறிபோன பணம்
இந்நிலையில் தான், சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து திஷா பதானியின் தந்தை ஜகதீஷிற்கு பதிவி ஆசை காட்டி உள்ளனர். அவர்கள், தங்களிடம் உள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச அரசாங்க ஆணையத்தில் உயர் பதவி வாங்கித் தருகிறோம். அதற்கு கொஞ்சம் செலவு மட்டும் செய்தால் போதும் என ஆசையை வளர்த்துள்ளனர்.